Home Blog Page 3

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

55ம் நாள் :ஐபிஎல் 2024 – 14.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றாது.

          டெல்லி அணி (208/4, அபிஷேக் போரல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57*, ஷாய் ஹோப் 38, ரிஷப் பந்த் 33, அக்சர் படேல் 14*, நவீன் உல் ஹக் 2/51) லக்னோ அணியை (189/9, நிக்கோலஸ் பூரன் 61, அர்ஷத் கான் 58*, க்ருணால் பாண்ட்யா 18, யுத்வீர் சிங் 14, க்விண்டன் டி காக் 12, இஷாந்த் ஷர்மா 3/23) 19 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

          பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் டெல்லி அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (பூஜ்யம் ரன்) முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் (33 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய ஷாய் ஹோப் (27 பந்துகளில் 38 ரன்), ரிஷப் பந்த் (23 பந்துகளில் 33 ரன்) ஆகியோர் 16.2ஆவது ஓவர் வரை ரன்ரேட்டை சீராகக் கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் 57 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் அக்ஸ்ர் படேல் (10 பந்துகளில் 14 ரன், 2 ஃபோர்) இருவரும் 20ஆவது ஓவர் வரை விளையாடி அணியின் ஸ்கோரை 208/4 என்ற நிலைக்கு கொண்டுவந்தனர்.

          209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் வீரர்கள்  4.1ஆவது ஓவருக்குள் கே.எல். ராகுல் (12 ரன்), க்விண்டன் டி காக் (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 ரன்), தீபக் ஹூடா (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 4/44. அதன் பின்னர் ஆயுஷ் பதோனியும் (6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு க்ருணால் பாண்ட்யா (18 ரன்), அர்ஷத் கான் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), யுத்வீர் சிங் (7 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் லக்னோ அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை தக்க வைக்கும் விதத்தில் ஆடினர்.

இருப்பினும் 19ஆவது மற்றும் 20ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் மற்றும் ரசிக் சலாம் இருவரும் திறமையாகப் பந்து வீசினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 189 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டுடன் நான் காவது இடத்தில் உள்ளது அந்த அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.

அந்த இரண்டு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன் ரன்ரேட் இப்போது இருப்பதைவிடக் குறைந்தால் டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இந்த ஆட்டத்தின் முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்துவிட்டது.

          டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

14.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான்1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்135711-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: முதலிடத்தில் கொல்கத்தா

ஐம்பத்திநான்காம் நாள்: ஐபிஎல் 2024 – 13.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் மழை காரணமாக ஆட்டம் இரவு 1036 மணிக்கு கைவிடப்பட்டது. 

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் கொல்கொத்தா அணி புள்ளிப்பட்டியலில் வகிக்கும் முதலிடம் உறுதியானது. குஜராத் 11 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

13.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்135711-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: சென்னை, பெங்களூர் அணிகள் வெற்றி!

53ம் நாள்: ஐபிஎல் 2024 – 12.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் அணியை (141/5, ரியன் பராக் 47, துருவ் ஜுரல் 28, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, ஜாஸ் பட்லர் 21, சஞ்சு சாம்சன் 15, சிம்ரஜீத் சிங் 3/26) சென்னை அணி (145/5, ருதுராஜ் கெய்க்வாட் 42*, ரச்சின் ரவீந்திரா 27, ட்ரில் மிட்சல் 22, ஷிவம் துபே 18, சமீ ரிஸ்வி 15*, மொயீன் அலி 10, அஷ்வின் 2/35) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 24 ரன்) மற்றும் ஜாஸ் பட்லர் (25 பந்துகளில் 21 ரன்)சுமாரான் தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இன்று 15 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ரியான் பராக் (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), துருவ் ஜுரல் (18 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் ஷுபம் துபே (பூஜ்யம்ரன்), அஷ்வின் (1 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது. சுழல் பந்து வீச்சாளர் சிம்ரஜீத் சிங் 26 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். 

142 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா (18 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (41 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய டரியல் மிட்சல் (22 ரன்), மொயீன் அலி (10 ரன்), ஷிவம் துபே (11 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), சமீர் ரிஸ்வி (ஆட்டமிழக்காமல் 15 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினார்கள். இதனால் சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட்டு இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர், சமீர் ரிஸ்வி தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் கடைசியில் அடித்த தொடர் இரண்டு ஃபோர்களுக்காகவும் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் 

பெங்களூரு அணியை (187/9, ரஜத் படிதர் 52, வில் ஜேக்ஸ் 41, காமரூன் கிரீன் 32*, விராட் கோலி 27, மஹிபால் லோமர் 13, கலீல் அகமது 2/31, ரசிக் சலாம் 2/23) டெல்லி அணி (19.1 ஓவரில் 140, அக்சர் படேல் 57, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 21, ஷாய் ஹோப் 29, யஷ் தயால் 3/20, லாக்கி ஃபெர்கூசன் 2/23) 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (13 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (7 பந்துகளில் 6 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் (29 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ரஜத் படிதர் (32 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் மஹிபால் லோமர் (13 ரன்), தினேஷ் கார்த்திக் (பூஜ்யம் ரன்), ஸ்வப்னில் சிங் (பூஜ்யம் ரன்), கரண் ஷர்மா (6 ரன்), முகமது சிராஜ் (6 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 

188 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் இன்று ரிஷப் பந்த் ஆடவில்லை. குறைவான ஓவர் ரேட்டுக்காக அவருக்கு அணித்தலைவர் என்ற முறையில் ஒரு ஆட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் போரல் மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (8 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அக்சர் படேல் (39 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்தனர்.

ஆனால் அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (3 ரன்), ரசிக் சலாம் (10 ரன்), குல்தீப் யாதவ் (6 ரன்), முகேஷ் குமார் (3 ரன்), ஆகியோர் அதிரடியாக ரன் சேர்க்கத் தவறியதால் டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 140 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டெல்லி அணி பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்போது 4 கேட்சுகளைத் தவறவிட்டது. டெல்லி அணியின் இன்றைய அணித்தலைவர் அக்சர் படேல் திறமையாக ஆடியபோதும் பிற பேட்டர்கள் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இது பெங்களூரு அணியின் ஐந்தாவது தொடர் வெற்றி. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி இப்போது வெற்றிப்ப் பாதையில் செல்கிறது.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 200 ரன் எடுத்து சென்னை அணியை 18 ரன் கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃபுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

டெல்லி அணியின் சுழல் பந்துவீச்சாளர், அக்சர் படேல்  ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் பெங்களூரு அணியிந் காமரூன் கிரீன் (32 ரன், 1 விக்கட்) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1293181.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்125710-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

#image_title

கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கு பிறகு கேரளா தமிழ்நாடு தலைநகர் களுக்கு இடையே மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை வழியாக தாம்பரம் – கொச்சுவேலி கோடை சிறப்பு ரயில் தென்னி ரயில்வே இயக்குகிறது.இதற்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கிய நிலையில் முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் – கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங் கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் (06035) தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 16 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருத்துவர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவுனீஸ்வரம், கொட்டரக்காரா, குண்டரா, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலானது (வண்டி எண்; 06036) வரும் 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 14 + 2 லக்கேஜ் பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கியுள்ளது.முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

14 ‘ஏசி’ பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளோ, முன்பதிவு இல்லாத பெட்டிகளோ கிடையாது. சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் முன்பதிவு இருக்கை அதிகம் உள்ளது.

விருதுநகர் -செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக இந்த ரயில் கொச்சுவேலிக்கு இயக்கப்படுவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக திருவனந்தபுரம் செல்லலாம்.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வரை எந்த ஊருக்கு பயணித்தாலும் ரூ. 990 கட்டணம். அதன்பின்பு விருதுநகர் ரூ.1040, சிவகாசி ரூ.1060, ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.1075, ராஜபாளையம் ரூ. 1085, தென்காசி ரூ. 1160, புனலுார் ரூ.1220, கொல்லம் ரூ.1275, கொச்சுவேலிக்கு ரூ. 1335 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலுார் ஆகிய எந்த ஊரில் இருந்தும் கொச்சுவேலிக்கு ரூ.990 என ஒரே கட்டணமாகும்.

திருவனந்தபுரம் -கொல்லம்-செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் முதல்முறையாக திருவனந்தபுரம் சென்னை இடையே விரைவு ரயில் சேவையை 50ஆண்டுகளுக்கு முன் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் துவக்கி வைத்தார்.திருவனந்தபுரம் கொல்லம் கொச்சி சென்னை வழித்தடம் உதயமானதும் இந்த வழித்தடத்தில் பிரதான வழியாக மாறி அதிக ரயில் இயக்கப்படுகிறது.கொல்லம் செங்கோட்டை மலைவழிப்பாதை முக்கியத்துவம் இல்லாமல் போனது.தற்போதுஇந்த வழியாக சிறப்பு ரயில் இயக்கம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1918 ஆம் ஆண்டு கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் பாதை தொடங்கியதில் இருந்து, 1976 ஆம் ஆண்டு அவசர காலத்தின் போது திருவனந்தபுரம் – கொல்லம் – கோட்டயம் – எர்ணாகுளம் வழித்தடம் அகலப்பாதையாக திறக்கப்படும் வரை, திருவனந்தபுரத்திலிருந்து கேரளாவிற்கு வெளியே செல்லும் ஒரே ரயில் பாதை திருவனந்தபுரத்தில் இருந்து மீட்டர் கேஜ் பெட்டிகள் மட்டுமே. கொல்லம் – தென்காசி வழியாக தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தது முக்கியத்துவமானது.

திருவாங்கூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று மீண்டும் சென்னை எழும்பூருக்கு செங்கல்பட்டு – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – ராஜபாளையம்- தென்காசி – கொல்லம் வழியாக சென்னையை இணைக்கும் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான அனந்தபுரி திருவனந்தபுரம் இன்றைய அகலப் பாதை வழியாக எஸ் ரயில்கள் (கொச்சுவேலி) – சென்னை (தாம்பரம்) சிறப்பு சேவையின் நினைவைப் புதுப்பிக்கும் வகையில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

ஸ்ரீமாத்ரே நமஹ

  • K.G. ராமலிங்கம்

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால் அன்னையை போற்றுகிறார், நாமும் துதிக்கிறோம்….

இன்று பகவத்பாதளின் அவதார தினம்.

“பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம். அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது. உலக பற்றை துறந்த பரமேஸ்வரனின் ஸ்வரூபமான ஆதி சங்கரரையும் விட்டு வைக்கவில்லை.

தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுது தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத் தருவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார். அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது மாத்ருகா பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள்.

இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டி காட்டி தாயிடம் மன்னிப்பை கோருகிறார். இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும், அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.”

மாதா பிதா குரு தெய்வம் – முதல் வணக்கம் தாய்க்குத்தான் – ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க அவரிடம் உங்கள் தாய் மொழி என்ன என்று தான் கேட்கிறோம் – தந்தை மொழி என்ன என்று கேட்பதில்லை…

“பெண்குழந்தைகள் தகப்பனார் மீதும் ஆண் பிள்ளகள் தாயார் மீதும் ஆராதித்திருப்பது இப்பவும் தொடர்கிறதா இது தப்பானதா?”

கிராமத்தில் உள்ள ஒரு சொலவடை ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று, அந்த வகையில் பெண் குழந்தை தந்தையிடமும் ஆண் குழந்தை தாயிடமும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், சில குடும்பங்கள் இருவரையும் ஒரே பார்வையிலே பார்க்கிறது….

அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம். அதன்பிறகு தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உதட்டளவு மட்டுமல்ல உள்ளத்தளவும் உயிரளவும் அம்மா/அப்பா நமது ஒரே உதிரம் தான். ஆனால் ஒரு சில வேறுபாடுகள் சில இடங்களில் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு தாய் எப்போது தான் பிறந்த பிறவிப்பயனை அடைகிறாள் என்றாள் அவளுக்கு ஒரு ஆண் மகவை பெற்ற பின்னர் தான் என்பது கண்கூடாக தெரிகிறது அல்லது அதைக் காணலாம்.

நீங்கள் கேட்கலாம் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி இல்லையா என்று, ஆம், மகிழ்ச்சி அந்த தாய்க்கு இருக்கத்தான் செய்யும், ஆனாலும் சில வேளைகளில் பெண்ணாகப் பிறந்து தான் அனுபவித்த கஷ்டங்களை இவள் எப்படி எதிர் கொள்ளப்போகிறாளோ என்ற ஏக்கம் அவளது அடிமனதில் அடிக்கடி ரீங்காரம் செய்வதை யாரும் அறியமுடியாது, அவளாக பகிர்ந்தாலொழிய….

தாய் தன் பிள்ளையை அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் பத்திரமாக இருக்கணும்னு என்று மார்பில் அரவனைத்துக் கொள்வாள். இதை நாம் நம் கண்ணெதிரே காணலாம்.

ஆனால் எதோ ஒரு அந்நோந்யமான அபரிமிதமான அன்பும் பாசமும் அன்னைக்கு தன் மகன் மீது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அவனும் அவளிடம் தான் தனது அபிலாஷைகளை பகிர்ந்து கொள்வான், அவளும் தன் மணவாளனிடம் மகனுக்காக சிபாரிசு செய்வாள்.

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம் பெயரும் தருணம் உணர்வு பூர்வமானது. ஆனால் அதே வேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டே அவளை புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ்வாள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது…..

இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்றே சொல்லும்.

எனவே, தயவு செய்து என் மகளை மகவைப்போல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் தந்தை தான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.

ஆனால் தற்போதய சூழ்நிலையில் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும் சரி.

அவர் உன்னுடைய அருகில் இருக்கும் போது பயன் படுத்திக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால் தாயைப் போல ஒரு ஆசான் ஆசிரியர், ஆண்டவன் அகில உலகிலும் கிடையாது – இது உண்மை… சத்தியம்.

மனதாலும் நினைவாலும் தாயும் அவள்தான் மடிமீது விளையாடும் சேயும் அவள் தான்.

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் வணக்கங்கள்..

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

இராமானுசர் தாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் என்று அறிவித்த போது, சீடர்கள் யாவரும் மனம் தளர்ந்து சோர்ந்து தம் வேதனைகளை வெளியிட்டனர்;  இராமானுசர் அவர்களைத் தேற்றி, ‘இரவு உணவு உண்ட பின்பு, அனைவரும் ஒன்றாக வந்து கூடுங்கள்’ என்று கட்டளையிட்டார். அதன்படியே அவர்கள் வந்து அமர்ந்ததும், அவர் தமது உபதேசங்களின் சாரமாக 74 வாக்கியங்களை இறுதி உபதேசமாக அவர்களுக்கு அருளினார். (அவற்றின் சாரம் பின்வருமாறு)

உங்கள் ஆசாரியரைப் போலவே வைணவர்களை மதித்துப் போற்றுங்கள். பழமையான பெரிய ஆசார்யர்களின் உபதேசங்களில் மனமார்ந்த ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள். விஷயபோகங்களுக்கு ஒருபொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள். இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே திரும்பத் கிரும்பப் பயிலுங்கள். ஒருவேளை ஆசாரியர்ன் அருளினால் நீங்கள் உத்தமஞானம் பெறுவீர்களானால், விஷயங்களிலுள்ள பற்று, உங்களை விட்டுத் தானே நீங்கிவிடும். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றற்று வைத்துக் கொள்ளப் பயிலுங்கள். 

பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழிகளையும் செவியுற்று மகிழுங்கள். பரமனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர்கள் விரைவில் பரமனை அணுகுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு இயற்றினாலன்றி, உய்வு பெற முடியாது. 

ஒரு வைணவனுடைய வாழ்வு ஏதேனும் தன்னலம் பெறுவதற்காக இருக்கிறது என்று ஒருபொழுதும் கருதாதீர்கள். நீங்கள் எப்பொழுதும் ஆதரிச வாழ்வை நடத்த வேண்டும்.

நாள்தோறும், குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது, உங்கள் ஆசார்யருடைய பெருமை பற்றி தியானம் செய்யுங்கள். நாள்தோறும் சிறிது பொழுதாவது ஆழ்வார்கள் அல்லது ஆசாரியர்களின் அமுத வாக்குகளைப் படியுங்கள். பரமனைச் சரணடைந்த வழியில் செல்லும் பெரியோர்களுடன் பழகுங்கள்.

முக்திக்கு வேறு, வழிகளும் உண்டு என்று சொல்பவர்களின் கூட்டுறவைத் தவிருங்கள். அற்ப லாபங்களுக்கும் சுகபோகத்துக்கும் எப்போதும் பாடுபடுபவர்களுடன் சேராதீர்கள்… என்றார். 

இராமானுசர் இவ்வளவு உபதேசித்த பின், அவருடைய சீடர்கள் தாங்கள் உலகில் வாழும்போது, உடலிலிருந்து உயிர் பிரியும் வரையில், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபற்றி நல்லுரை வழங்க வேண்டினர். அதற்கு இராமானுசர் சொன்னார்… 

ஸ்ரீபாஷ்யத்தைப் பயின்று அதைப் பிறருக்கும் ஈற்பியுங்கள். இது பரமனுக்கு உகந்த நல்ல தொண்டு. இது முடியாதென்றால் நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் அருளிய திவ்யப் பிரபந்தங்களை நன்கு கற்று, அவற்றை உரிய சீடர்களுக்குக் கற்பியுங்கள். இது முடியாதென்றால், ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமான்களுக்குத் தொண்டு செய்து வாழுங்கள். இது முடியாதென்றால், திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு அங்கே அமைதியுடன் வசியுங்கள். இதுவும் முடியாதென்றால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, உங்கள் முழு பளுவையும் பரமனிடமோ உங்கள் ஆசார்யரிடமோ ஒப்படைத்துவிட்டு, த்வய மந்திரத்தை உச்சரிப்பதிலேயே ஆழ்ந்திருங்கள். 

இவற்றில் எதுவுமே முடியவில்லை என்றால், ஞானமும் பக்தியும் நிறைந்து பற்றற்றவனாக விளங்கும் ஒரு வைணவனைத் தேடிக் கண்டு, அவன் உங்களுக்கு மனமுவந்து அருள் செய்யும்படி நடந்து கொள்ளுங்கள்; உங்கள் அகங்காரத்தை அறவே துறந்து அவன் சொற்படி நடந்துகொள்ளுங்கள். இதுவே உங்கள் முக்திக்கு வழி.

‘இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பன் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து கொள்ளுங்கள். வைணவர்களே உங்கள் நண்பர்கள்: பரமனைப் பகைப்பவர்கள் உங்கள் எதிரிகள்; உலகியல் வழியில் வாழ்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். 

சுவையான தளிர் வெற்றிலையும், நறுமணமுள்ள மலர்களையும், குளிர்ந்த சந்தனத்தையும் பெற்றார்போல, உங்கள் நண்பர்களைக் கண்டு வரவேற்று மகிழுங்கள்.

உங்கள் எதிரிகளைக் காணும்போது, பாம்பையும் புலியையும் நெருப்பையும் எதிர்கொண்டாற்போலக் கருதி, அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள். உலகியல் வழியினரைக் காணும்போது, கல்லையும் புல்லையும் கண்டாற் போலே. அசட்டையாக இருங்கள். பரமனிடம் சரணடைந்தவர்கள் வாழ வேண்டிய முறை இது. நண்பர்களான வைணவர்களுடன் பழகுவது, உங்களுக்கு ஆன்ம ஒளியை உண்டாக்கும். எதிரிகளிடமிருந்து ஒதுங்கியும், உலகியல் வழியினரிடம் அசட்டையாக இருந்தும் அவர்களுடன் பேசாமலும், அவர்களால் கிடைக்கக்கூடிய உலகியல் இலாபத்துக்காக அவர்களிடம் மதிப்புக் கொள்ளாமலும் வாழுங்கள். ஏனென்றால், இந்த இலாபங்கள் உங்களை விரைவில் பரமனுக்கு எதிரிகளாக்கிவிடும். 

நீங்கள் வேண்டும் எதையும் தாராளமாக அளிக்க, கருணைக் கடலான பரமன் எப்போதும் சித்தமாக இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பகைவரிடம் எதையுமே யாசிக்காதீர்கள்.!

இவ்வாறு 74 வாக்கியங்களை அளித்த பின், எது தகாது என்றும் ஆறு வாக்கியங்களைக் கொடுத்தார். 

  1. பரமனின் தூய விக்கிரகங்களை வெறும் கற்கள் என்று நினைப்பது
  2. தம் ஆசார்யரைச் ‘சாதாரண மனிதன்’ என்று நினைப்பது
  3. பரமனின் அடியார்களை அவர்கள் பிறந்த சாதிக்கு ஏற்றபடி உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்’ என்று நினைப்பது (வைணவனின் சாதியை ஆராய்வது), 
  4. எல்லாப் பாவங்களையும் நீக்கி மாந்தரைத் தூயவராக்கும் பகவத் பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை ‘வெறும் தண்ணீர் என்று நினைப்பது
  5. எல்லாப்  பாவங்களையும் போக்கி கலியின் வேதனை தீர்க்கும் உபாயமான பகவத் பாகவதர்களின் திருநாமங்களையும் மந்திரங்களையும் வெறும் சப்தங்களாக நினைப்பது,
  6. உலகமனைத்துக்கும் நாதனான திருமகள் கேள்வனான நாரணனை ‘மற்ற தெய்வங்களுடன் ஒத்தவன் என்று எண்ணுவது  
  7. இத்தகைய எண்ணங்களை உடையவன் கொடும் நரகையே அடைவான். 

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

உடையவர் திருநக்ஷத்திரம் இன்று: சித்திரை திருவாதிரை!

ஸ்ரீராமாநுஜாச்சாரியரின் 1007 வது திரு நட்சத்திரம் இன்று. #ஸ்ரீவைஷ்ணவ_லட்சணம் என ஒன்று இன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த மஹாபுருஷர் தான். ஸ்ரீ பாஷ்யம் சமைத்த பவிஷதாச்சார்யரும் இவரே.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது…… அத்வைதம் ஸ்தாபித்த ஆதி சங்கரரும் பரம பவித்ர விஷட்டாத்வைதம் பேசின இந்த ஆதிஷேச அம்சமான இலட்சுமண முனிக்கும் ஒரே நட்சத்திரமா என்று…

ஆம். நம் ஆச்சாரிய மஹநீயர் இருவருக்கும் ஓரே நட்சத்திரம் தான். ஆனால் ஆதிசங்கரருக்கு விசாக (வைகாசி) மாதத்தில் வரும் சுக்லபட்ச திருவாதிரை. இவருக்கு சித்திரை மாதத்தில் வரும் திருவாதிரை.அவர் ஜனித்து இவ்வாண்டோடு 1236 ஆண்டுகள் ஆகுவதாக ஓர் கணக்கு உண்டு.இவருக்கு இது 1007 ஆம் ஆண்டு. அவர் பேசினது… ஸ்தாபித்தது…. #அத்வைதம் என்றால் இவர் ஸ்திரமாக நின்றது #விஷ்டாத்வைதம்.
முன்னது விதை என்ற பின்னது அந்த விதை வெடித்து, கிளர்ந்து விருட்சமாக வளர்ந்து அதில் பூத்துக் குலுங்கிய மலர்.

இங்கு நம்மில் பலரும் ஆதிசங்கரரை சைவம் என்கிற சிறு கோட்பாட்டு வட்டத்தினுள் அடக்கி விடுகிறோம். ஆனால் அது தவறு .அவர் ஆகச் சிறந்த அத்வைத ஏகாங்கி. பல வைணவ குருமார்களும் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள்…… மடங்கள் எல்லாம் அந்நாளில் இருந்திருக்கிறது.

பஜ கோவிந்தம் பேசியதும் ஆதி சங்கரர் தான். கனகதாரா மற்றும் கராவலம்பம் ஸ்தோத்திரம் சமைத்ததும் ஆதிசங்கரர் தான்.கீதா பாஷியத்தை முன்னெடுத்து அன்றிருந்த நாஸ்தீகவாதிகளை நைய புடைத்ததும் ஆதி சங்கரர் தான்.அதன் பொருட்டே ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மத்தியில் உள்ள மஹாபாரதத்தில், நடுநாயகமாக விளங்கும் கீதைக்கு ……… அந்த உதேசத்திற்கான வியாக்கியானத்திற்கு….., பகவத் கீதை என்று பெயர். ஆதிசங்கர பகவத் பாதர் என்கிற பெயரை அடியொற்றி.

அவருக்கு சற்றேறக்குறைய 180 ஆண்டுகளுக்கு பிறகு ஜனித்த நம் ஜகதாசாரியருக்கு, பவிஷ்யதாச்சாரியர் என்கிற திருநாமம் உண்டு. இஃது காலத்தால் மூத்தவரான நம்மாழ்வார் அவர் தம் மதுரகவி ஆழ்வாருக்கு பொருநை ஆற்றின் கரையில் (தாமிரபரணி) வார்த்த திருவுருவச்சிலையை கொடுத்தது, ஸ்ரீராமாநுஜரின் வருகையை கட்டியம் கூறுவது போல் அமைந்ததெல்லாம் பெறும் வரலாறு.

சம்பிரதாயத்தில் பல ஏற்றமிகு காரியங்களை சாதித்துக் கொடுத்து இருக்கிறார் என்பதை எல்லாம் விட ஆகச் சிறந்த நிர்வாகியாக திகழ்திருக்கிறார். அன்று அவர் ஏற்படுத்தின பத்துக் கொத்து பரிவாரங்கள் இன்றளவும் ஸ்ரீரங்கத்து நிர்வாக செயல்பாடாக இருக்கிறது என்றால்…….. இன்றைய நவீன உலகின் நிர்வாகவியலை அன்றே கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

அவரது வாழி திருநாமத்தின் ஓர் வரி…… தென்னரங்கத்து செல்வம் முற்றும் திருத்தி வைத்தோன் வாழியே… என்பதை அனுபவித்து அந்வயக்கவேண்டும். இதன் பொருட்டே அழகிய மணவாளன் அவருக்கு #உடையவர் என்கிற திருநாமத்தை தந்தருளினார்.

இங்கு பின்னாளில் உடையார் என்பதே ராஜ ராஜ சோழனுக்கு உரித்தான பட்டப் பெயர் என்றெல்லாம் கிளம்பினார்கள். கல்வெட்டு ஆதாரங்களை கொண்டு வந்து கொட்டினார்கள். திருவாளர் திரு பாலகுமாரன் எழுதிய ஒரு புத்தகத்திற்கு உடையார் என்பதே பெயர். ஆனால் அது பரகேஸரி உடையார் எனும் முழுப்பெயரை தாங்கி நிற்கிறது. இதன் பொருள் #பர என்பதற்கு எதிரி எனும் பொருளில் கேஸரி என்பது சிங்கத்தை குறிக்கும் சொல்லோடு சேர்த்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன் என்கிற ரீதியில் அழைத்திருந்தார்கள்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதற்கு அர்த்தம் வேறு. தவிர ராஜராஜனுக்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்தே இவரது ஜனனம் அமைந்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடையவரின் நிர்வாகத் திறனுக்கு இந்த பெயர் பொருந்தும் என்றாலும் அவரது திருவுள்ளம் எத்தகையது என்பதை அறிவதற்கு சில பல சம்பவங்களை அந்வயக்கவேண்டும். அழகிய மணவாளனுக்கு இரவு பொழுதில் பால் அமுது செய்விக்க நல்ல தரமான பசுக்களை கொண்டு வந்து கொட்டிலில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர்…. வீதியுலா செல்ல நேர்ந்த சமயத்தில் இதனை கவனித்த நம் ராமாநுஜ முனி அந்த மாட்டிற்கு கருபஞ்சாரு கலந்த நுனி பசும்புல்லை மாத்திரமே உண்ணக் கொடுக்க வேண்டும் என்றும்… பால் கறக்கும் மூன்று நாழிகைக்கு முன்பாக நன்கு குளிர்ந்த நீரில் குளிப்பாட்டிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அது சரிவர நடக்கிறதா என கண்காணித்து வந்தார்.

ஏன்…..?

அப்படி நன்கு பராமரிக்கப்பட்ட மாடுகள் மனம் குளிர்ந்து அதிக இனிப்பு சுவை கூடின பாலை தரும் என்பது அவரது உள்ளக்கிடங்க இருந்தது. அந்த பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அழகிய மணவாளனுக்கு இரவில் பாலமுது செய்வித்து வந்திருக்கிறார் என்றால்…. எப்பேர்ப்பட்ட பாவனை அது. இதற்காகவே ஏழு பிரகாரங்களை கொண்ட திருவரங்கத்தில்……, ஏழாவது பிரகாரத்தில் வட கிழக்கில் கொட்டகை அமைத்து அதில் பசுக்களை வைத்து பராமரித்து வந்திருக்கிறார். அந்த இடம் தான் இன்றைய கீழ சித்திரை வீதியின் வட கோடியில் உள்ள கோரத மூலை. இன்றைக்கும் சித்திரை தேர் இந்த இடத்தில் இடத்தில் இருந்து தான் புறப்பாடு கண்டருளப்பண்ணப்படுகிறது.

இந்த உலகில் வேறெங்கேனும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஓர் விஷயம் வழிவழியாக சம்பிரதாயமாக நடைபெறுகின்றனவா என்பதை நினைத்து பாருங்கள்.இதன் வீர்யம் புரியும்.

ராமாநுஜரின் தயையும், தாஸ்ய பாவத்தையும் எத்தனை தூரம் எடுத்து சொன்னாலும் தகும் எனும்மாப்போலே….. அவரது நிர்வாகம் ஸ்ரீரங்கத்தில் எப்படி இருந்திருக்கிறது ஓர் உதாரணம்….. உன் அதிகாரம் என்ன #கிள்ளாக்கு பறக்கிறதா என இன்றளவும் ஒருவரை பகடி செய்ய அங்கு பயன்படுத்துவர்.

அது என்ன கிள்ளாக்கு?????

ராமாநுஜர் திருவரங்கத்தின் சந்தன மண்டப கொரட்டில் (படிக்கட்டு)அமர்ந்து கொண்டு ஓர் அரசரை போல் நீதிபரிபாலனம் நிர்வகித்த காலத்தில் பத்துக்கொத்து பரிவாரங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்.இதிலும் இரண்டு பத்துக்கொத்து இருந்தது.உள்துறை, வெளித்துறை என இரண்டு. இந்த உள்துறை கவனித்தவர் வசித்து வந்ததால் தான் ஆறாம் பிரகாரத்திற்கு உள்துறை வீதி என்றே பெயர். (இன்றைக்கு அது உத்தர வீதி என்பர்)

மற்ற கோவில்களை போல் பராமரிப்பு செய்ய பிரம்மோற்சவம் விழாவின் முன்னதாக என வருடத்திற்கு ஒரு முறை பார்த்து கொள்ளலாம் என்பதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் நடவாது. நித்தியப்படி அமுது பண்ணி வைக்க நித்தம் நித்தம் மண்பாண்டங்கள் பண்ணிக்கொண்டே இருப்பதில் தொடங்கி பராமரிப்புக்கு என்றே தனியே ஒரு காலவரை ஏற்படுத்தாமல் அப்போதுக்கு அப்பொழுதே வேலை நடக்கும் அங்கு. வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் இடமாக இருப்பதால் சவாலான இந்த பணியினை மேற்கொள்ள இவ்வாறான விஷயங்களை முன்னெடுத்து அதனை வகைப்படுத்தி வைத்திருந்தார்.

இவர்களுக்கான உத்தரவு என்பது வெற்றிலையில் …, வெற்றிலைக்காம்பு கிள்ள பயன்படுத்தப்படும் குறளியால், அடையாளம் ஏற்படுத்தி செய்தி அனுப்பி வேலை வாங்கி இருக்கிறார் ராமானுஜர். அந்த குறளிக்கு கிள்ளாக்கு என்று பெயர். உள்துறை வேலைகளில் வெற்றிலையின் இடது புறத்திலும்……, இதுவே வெளி வேலை என்றால் அதனை வலது பக்கத்தில் கிள்ளாக்கு கொண்டு செய்தி அனுப்பி இருக்கிறார்.

அதன் பொருட்டே உன் அதிகாரம் கிள்ளாக்கு பறக்கிறதா என சொல்லடவு ஏற்பட்டுள்ளதாம் இங்கு. இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. சமையல் குறிப்புகள் எல்லாம் அந்த கல்வெட்டில் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த உலகிலேயே சமையல் குறிப்புகள் கல்வெட்டில் இருப்பதும் இங்குதான்,அதிகப் படியான எண்ணிக்கையில் கல்வெட்டுகள் இருப்பதும் ஸ்ரீரங்கத்தில் தான்.

எரிதுரும்பு…. விறகிற்கான பெயர். விடாய் பருப்பு…. மொச்சையை குறிக்கும் சொல் என்பது போன்ற பல சுவையான சுவாரஸ்யமான தகவல்களும் இங்கு கல்வெட்டில் உண்டு என்பது கூடுதல் தகவல்.

என்ன….. சாப்பிடுவதற்கெல்லாமா கோவிலில் முக்கியத்துவம் கொடுத்தார்களா என்றால்… அதற்கும் பதில் இருக்கிறது கல்வெட்டில்…

ஓர் ஆவணி மாத மழை நேரத்தில்….. கோவிலில் மத்யான நேரத்தில் அழகிய மணவாளனுக்கு நாவல் பழங்களோடு ததியமுதம் என்கிற தயிர் சாதம் கண்டருளப்பண்ணி இருக்கிறார்கள். இதற்கு மறுநாள் அவரது திருமேனி வாட்டமுடன் இருப்பதை கண்டு ராமானுஜர், பதற்றம் கொண்டு நேற்றைய தினம் என்ன அமுது செய்வித்தீர்கள் கேட்க மடப்பள்ளியில் இருந்து பதில் வந்திருக்கிறது இது போல கண்ணணுக்கு மிகவும் பிடித்தமான நாவல் பழங்களோடு கூடின ததியமுது என்று.

உடனே விஷயத்தை ஊகித்து அறிந்த அவர், அதன் பொருட்டே ஜலதோஷம் பிடித்து மணவாளன் வாட்டமுடன் இருப்பதை உணர்ந்த அவர் கோவிலினுள்ளே எழுந்தருளியுள்ள தன்வந்திரி சன்னதியில் வைத்து சுக்கு மிளகு திப்பிலி கஷாயம் வைத்து அதனை கண்டருளப்பண்ணிவிட்டு அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்க…… மறுநாள் புதுபொலிவோடு விளங்கினார் என குறித்து வைத்துக்கிறார்கள்…..

எப்பேர்ப்பட்ட பாவனை அது. வேறு எங்கேனும் இப்படியான ஒன்றை அந்வயக்க முடியுமா !!??

விஷயம் அத்தோடு நிற்கவில்லை…, அதன் பின்னான காலத்தில் தன்வந்திரி சன்னதியில் வைத்து கஷாயம் தயாரித்து அதனை அழகிய மணவாளனுக்கு வாரத்தில் ஒரு நாள் கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தனர்.மற்ற சன்னதிகளை காட்டிலும் கொஞ்சம் உயர்த்தியே கட்டுவித்து இருக்கிறார்கள். ஏனெனில் பக்தர்கள் புழங்கும் இடத்தை விட சற்று உயரமான இடத்தில் இருந்தால் நோய் தாக்கம் குறையும் என்பதால்… என்கிறார்கள்.

இன்றைய அறிவியலும் இதைத் தான் சொல்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட ஞானம் இது.

நாம் கோவில்களை…… கோவில் ஊடான அறிவியலை எல்லாம் உணர்ந்து கொள்வதே இல்லை. விஞ்ஞானத்தை ஏற்கும் மனது மெய்ஞானத்தை தள்ளுபடி செய்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அபத்தமாக தெரியக்கூடும். அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தபாவத்தை காண்பித்து கொடுக்கவேயில்லை …..

நாம் நம் கற்றலை போதித்தல் என்கிறோம். கொஞ்சம் நுட்பமான ஆராய்ந்தால் போதை என்கிற வேர் சொல்லிருந்தே போதனை,போதித்தல் என்கிற வார்த்தை வருவதை உணர முடியும். அப்படி என்றால் கற்றுக் கொள்வதென்பது வேறு … கற்றல் எங்கிற பாவனை வேறு.
இவ்வளவு நுணக்கமாக பதம் பிரித்து சொன்னவர்கள் நமது முன்னோர்கள்…. இதில் உச்சம் கண்டவர் நம் ராமாநுஜர்.

இன்றைய தேதியில் #ஸ்ரீ என்கிற எழுத்தை.. வார்த்தையோடு சேர்த்தெழுதுவதை யாரேனும் கண்டால்…. அதற்கு நம் ராமானுஜரே முழு முதல் காரணம். சித்,அசித், ஈஸ்வர தத்துவமாகட்டும், பின்நாளைய பசு, பதி, பாசம் என்பதாகட்டும் இவை எல்லாவற்றிற்குமான மூலம் #ஸ்ரீராமாநுஜர். ஸ்ரீ எனும் பதம் ஜீவக்கோடியில் முதன்மையானவளும்….. ஈஸ்வரக்கோடியில் கடைசியாக இருப்பவளை குறிக்கும் என்பதை காண்பித்து கொடுத்தவர் தான் இந்த யதிராஜர். உயிர்ப்புள்ள ஒன்றை குறிக்க ஸ்ரீ என்கிற பத பிரயோகம் பின்னாளில் வழக்கத்தில் வந்தது. #திரு இதன் தமிழ் உருப்பு.

இதுவே…..
இவையே நம் தமிழ் சமூகத்தின் வார்ப்புரு. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் அளவில் சின்னஞ்சிறு விஷயத்தை மாத்திரமே இந்த நந்நாளில் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னமும் தெரிந்துகொள்ள… அதில் அமிழ்ந்து அனுபவிக்க ஏராளம் இருக்கின்றது.

❣எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

  • ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

IPL 2024: மீண்டும் சொதப்பிய மும்பை; கொல்கத்தா வெற்றி

52ம் நாள்: ஐபிஎல் 2024 – 11.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

கொல்கொத்தா அணி (16 ஓவர்களில் 157/7, வெங்கடேஷ் ஐயர் 42, நிதீஷ் ராணா 33, ரசல் 24, ரிங்கு சிங் 20, ரமன்தீப் சிங் 17, பும்ரா 2/39, பியுஷ் சாவ்லா 2/28) மும்பை அணியை (16 ஓவர்களில் 139/8, இஷான் கிஷன் 40, திலக் வர்மா 32, ரோஹித் ஷர்மா 19, நமன் தீர் 17, சூர்யகுமார் யாதவ் 11, ஹர்ஷித் ராணா 2/34, வருண் சக்ரவர்த்தி 2/17, ரசல் 2/34) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் மைதானத்தில் மழை பெய்தது. இதனால் டாஸ் 2045 மணிக்குத்தான் போடப்பட்டது. ஆட்டம் அணிக்கு 16 ஓவர்களாகக் குறக்கப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (6 ரன், முதல் பந்தில் ஒரு சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (பூஜ்யம் ரன்,கோல்டன் டக்) முதல் ஏழு பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்து; இது சுனில் நரேனுக்கு ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்டது. நரேன் பந்து வெளியில் செல்கிறது என எண்ணி எந்த ஸ்ட்ரோக்கும் ஆடவில்லை; ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பை தாக்கியதால் நரேன் கிளீன் போல்டானார்.

நான்காவதாகக் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (7 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (21 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), நித்தீஷ் ராணா (23 பந்துகளில் 33 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஆண்ட்ரு ரசல் (14 பந்துகளில் 24 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் ஸ்கோரை சற்று நிலை நிறுத்தினர்.

இதற்குப் பிறகு ஆடவந்த ரிங்கு சிங் (12 பந்துகளில் 20 ரன்), ரமன்தீப் சிங் (8 பந்துகளில் 17 ரன்), மிட்சல் ஸ்டார்க் (2 ரன்) ஆகியோரால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.

இதனால் கொல்கொத்தா அணி நிணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. 

158 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (22 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (24 பந்துகளில் 19 ரன்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (11 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் 10 ஓவர் முடிவில் மும்பை அணி 81/2 என்ற நிலையில் இருந்தது,

இச்சமயத்தில் கொல்கொத்தா அணியின் ஸ்கோர் 97/4 என்பதாகும். இதற்குப் பின்னல் வந்த மும்பை அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள்தான்; இருந்தாலும் இன்று அவர்களின் ஆட்டம் எடுபடவில்லை.

ஹார்திகபாண்ட்யா (2 ரன்), டிம் டேவிட் (பூஜ்யம் ரன்), நெஹல் வதேரா (3 ரன்), நமன் தீர் (17 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லமல் ஆடினார்கள். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 139 ரன்எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாள்ரும் தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

நாளை ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.  

11.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1293181.428
ராஜஸ்தான் 1183160.476
ஹைதராபாத்1275140.406
சென்னை1266120.491
டெல்லி126612-0.316
லக்னோ126612-0.769
பெங்களூரு1257100.217
குஜராத்125710-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: சென்னைக்கு எதிராக குஜராத் அணி வெற்றி

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணிமன்

51ம் நாள்: ஐபிஎல் 2024 – 10.05.2024

குஜராத் டைடன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

குஜராத் அணி (231/3 ஷுப்மன் கில் 104, சாய் சுதர்ஷன் 103, துஷார் தேஷ்பாண்டே 2/33) சென்னை அணியை (196/8, டேரில் மிட்சல் 61, மொயீன் அலி 48, தோனி 26*, ஷிவம் துபே 21, ரவீந்தர ஜதேஜா 18, மோஹித் ஷர்மா 3/31, ரஷீத் கான் 2/38) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (51 பந்துகளீல் 103 ரன், 5 ஃபோர் 7 சிக்சர்) மற்றிம் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 6 சிக்சர்) இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 210 ரன் சேர்த்தது. இன்று பல சாதனைகளைப் படைத்தனர் அல்லது உடைத்தனர்.

ஐ.பி.எல்-இன் 100ஆவது சதம் இன்று கில் மூலம் அடிக்கப்பட்டது. கில் இன்று ஐ.பி.எல்-இல் தனது 1000ஆவது ரன்னை அடித்தார். அதனை 25 இன்னிங்க்ஸில் அவர் அடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும்.

எந்த ஒரு விக்கட்டிற்கும் ஒரு ஜோடி அடித்த அதிக பட்ச ரன் 229 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2016இல் இரண்டாவது விக்கட்டிற்காக அடித்தனர். அடுத்த அதிக பட்ச ரன் 215 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2015இல் இரண்டாவது விக்கட்டிற்காக ஆட்டமிழக்காமல் அடித்தனர்.

மூன்றாவது அதிக பட்ச ரன் 210 ஆகும். இது க்விண்டன் டி காக்கும் கே.எல். ராகுலும் 2022இல் முதல் விக்கட்டிற்காக அடித்தனர். இன்று இதனை கில்லும் சாய்சுதர்ஷனும் சமன் செய்தனர். சாய் சுதர்ஷன் 17.2ஆவது ஓவரிலும் கில் அதே ஓவரின் கடைசிப் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

19ஆவது மற்றும் 20ஆவது ஓவரில் ஷர்துல் தாகூர், சிம்ரஜீத் சிங் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா 6 மற்றும் 12 ரன்னும் கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது. 

232 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே (5 பந்துகளில் 1 ரன்) மற்றும் ரச்சின் ரவீந்த்ரா (2 பந்துகளில் 1 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்) மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.

இதனால் சென்னை அணி மூன்று ஓவர் முடிவதற்குள் 10 ரன்னுக்கு மூன்று விக்கட்டுகள் இழந்து ஒரு மோசமான நிலையை அடைந்தது. அதன் பின்னர் டேரியல் மிட்சல் (34 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), மற்றும் மொயீன் அலி (36 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதன் பின்னர் ஷிவம் துபே (13 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ரவீந்தர ஜதேஜா (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), எம்.எஸ். தோனி (ஆட்டமிழக்காமல் 26* ரன்) மற்றும் சாண்ட்னர் (பூஜ்யம் ரன்), ஷர்துல் தாகூர் (ஆட்டமிழக்காமல் 3 ரன்)

இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 196 ரன்எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில்  தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

10.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1183160.476
ஹைதராபாத்1275140.406
சென்னை1266120.491
டெல்லி126612-0.316
லக்னோ126612-0.769
பெங்களூரு1257100.217
குஜராத்125710-1.063
மும்பை12488-0.212
பஞ்சாப்12488-0.423

Lucknow Super Giants 12

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

#image_title

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஐயனார் கோவில் ஆறு. விருதுநகர் மாவட்டப் பகுதியில் சுற்றுலாத் தலமாகத் திகழும் இங்கே, போதிய மழை இல்லாமல் ஆற்றுப் பகுதி தொடர்ச்சியாக வறண்டே காணப்படுகிறது

தமிழகம் முழுவதிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று ராஜபாளையம் பகுதியில் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. எனினும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாமல் ஐயனார் கோவில் ஆற்றுப்பகுதி வறட்சியாக பாறைகள் மட்டுமே வெளித் தெரிந்து, வறண்டு காணப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் இராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரம் வழங்கக்கூடிய ஆறாவது மைல் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.