February 13, 2025, 12:42 PM
30.8 C
Chennai

ரகளை மாணவர்களுக்கு நூதன தண்டனை! ஒரு அடி கொடுத்தால் கூட பரவாயில்லை… 1330 x ஒண்ணேமுக்கால் அடி..!

திருநெல்வேலி வ.உ.சி மைதானம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு சண்டைகளில் ஈடுபட்ட இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர். இது இன்று சமூகத் தளங்களில் பரபரப்பாகப் பகிரப் பட்டது.

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய இடமாகத் திகழ்வது பஸ் நிலையமும் வ.உசி மைதானமும்தான்! அதிகமாக மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்கு வ உ சி மைதானத்திலும் பஸ் நிலையத்திலும் வைத்து நெல்லையைச் சேர்ந்த இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிறுசிறு சண்டைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பின்னர் சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

இது குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கூறியுள்ளனர். இதை அடுத்து, ரகளையில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் இரு வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 49 பேரை, அவர்களின் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.

அவர்கள் செய்த செயலுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்ற தண்டனை போலீசாரால் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு அமர்ந்த படி 1330 குறளையும் எழுதினர். அதன் பின்னர் மாணவர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து முத்திரை ஒன்றை பெற்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவும் இருந்தது.

திருக்குறளும் திருவள்ளுவரும் இப்போது பிரபலம் ஆகியிருப்பதால், சண்டையிட்டுக் கொண்ட மாணவர்கள் 1330 குறளையும் எழுத வேண்டும் நூதன தண்டனை போலீசாரால் வழங்கப் பட்டது பெரிதும் பாராட்டப் பட்டது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories