அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, கருத்துரிமையை மறுக்க எவருக்கும் உரிமை கிடையாது.
எதிர்வினை என்பது தாறுமாறாக பேசுவது என்பதல்ல. கருத்தை கருத்தால் மறுக்க வேண்டும். அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரையில் மறுப்புரை சொல்லியிருக்கிறார்களா இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள்?
அதற்கு யோக்கியதை இல்லாதவர்கள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்வதைப் போல இங்கே வருகிறார்களே.
யாராக இருந்தாலும் முதலில் சொல்லப்பட்ட இடத்தில்தானே போய் முட்டிக் கொள்ள வேண்டும்? பதிலாக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு தரம் தாழ்ந்து பேசுகிறார்களே. அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா?
இதெல்லாம் போன வருடம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.