திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை கட்டுப்படுத்த முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். அவர்களுக்கு மாதத்தில் இரு முறை தரிசன அனுமதி வழங்கி உள்ளனர்.
அந்த வகையில் 9–ந்தேதி மற்றும் 23–ந்தேதி முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும், 10–ந்தேதி மற்றும் 30–ந்தேதி ஒரு வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் விடப்படுகிறது என்று திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.