இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை

இலங்கையிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களை சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்து வந்து இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை நடத்தப்பட்டது. இலங்கை வவுனியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக 40 பக்தர்கள் சபரிமலை வந்து கொண்டிருந்தனர். கடலூரில் அவர்களை வரவேற்ற இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று பாத பூஜை செய்தார்.

நடராஜரை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பக்தர்கள், இலங்கையில் இருந்து இன்னும் ஏராளமான பக்தர்கள் இந்தியா வர ஆவலாக இருப்பதாகக் கூறினர். எனவே இலங்கை – தமிழகம் இடையிலான கப்பல் போக்குவரத்தினை தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் இருந்து ஆன்மீக யாத்திரையாக _ சபரிமலை நோக்கி பயணமாக தமிழகம் வந்தடைந்த இலங்கை வவுனியா அய்யப்ப பக்தர்களுக்கு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

இது குறித்து ராம.ரவிக்குமார் கூறியதாவது:

இலங்கை வவுனியா பகுதியில் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டு தமிழகம் வருகை 34 ஆண்கள் – 4தாய்மார்கள் உட்பட 38 பேர் நேற்று 6.1 .2017 விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை இந்து மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் தாம்பரம் சீனிவாசன் தலைமையில் சிறப்பாக வரவேற்று கடலூர் அனுப்பி வைத்தனர் .

கடலூர் வருகை தந்த சிவனடியார்களை மாவட்ட எல்லையில் இளைஞரணி மாநில செயலாளர் கடலூர் NR பரணீதரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் வரவேற்றனர்.
இரவு வழிபாடு முடித்து அன்னதானம் நடைபெற்றது.

இன்று புலர்காலை 7 மணிக்கு கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாட லீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் – வழிபாடு முடித்து சிதம்பரம் பயணித்தோம். காவல்துறை புடைசூழ சிதம்பரம் சென்றடைந்த அனைவரையும் சிவனடியார்கள் இந்து இயக்க பிரமுகர்கள் நமது நிர்வாகிகள் – அய்யப்ப தீட்சிதர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கிழக்கு கோபுரம் முன்பு அனைத்து இலங்கை சைவர்களுக்கும் பாத பூசை செய்து – மலர் தூவி – பொன்னாடை அணிவித்து அடியேன் அழைத்து சென்றேன். தில்லை நடராசர் சன்னதி முன்பு இலங்கை இந்து சைவர்கள் வருகையை தீட்சிதர்களிடம் கூறிய வுடன் தாய் உள்ளத் தோடு தீட்சிதர் பெருமக்கள் அனைத்து மக்களுக்கும் பிரார்த்தனை செய்து இரு நாட்டு உறவுகள் ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற வேண்டும் – இலங்கை மக்கள் அடிக்கடி சிதம்பரம் வாருங்கள். கப்பல் மூலம் வருகை தரும் இலங்கை சைவர்களை வரவேற்க தயாராக உள்ளோம் என்றனர்.

அய்யப்ப ேஜாதி கண்ட உணர்வு சிதம்பரம் நடராஜர் தரிசனம் என்று ஆனந்தமாக கூறினர். அது மட்டுமல்லாது ஆடி_ ஆவணி மாதம் இலங்கையில் கதிர்காமம் முருகன் – நல்லூர் முருகன் கோவில் விழாவுக்கு கப்பல் மூலம் காங்கேசன்துறைக்கு வாருங்கள் என இலங்கை சைவ தமிழர் கள் வேண்டு கோள் விடுத்தது இரு நாட்டு உறவை மேலும் உறுதிப்படுத்தியது.

ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற்றால் தான் அரசியல் உறவு பலப்படும் .இதற்கு ஆன்மீக அரசியல் ஒரு வழியாக – தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி – வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories