இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை

இலங்கையிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களை சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்து வந்து இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை நடத்தப்பட்டது. இலங்கை வவுனியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக 40 பக்தர்கள் சபரிமலை வந்து கொண்டிருந்தனர். கடலூரில் அவர்களை வரவேற்ற இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று பாத பூஜை செய்தார்.

நடராஜரை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பக்தர்கள், இலங்கையில் இருந்து இன்னும் ஏராளமான பக்தர்கள் இந்தியா வர ஆவலாக இருப்பதாகக் கூறினர். எனவே இலங்கை – தமிழகம் இடையிலான கப்பல் போக்குவரத்தினை தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் இருந்து ஆன்மீக யாத்திரையாக _ சபரிமலை நோக்கி பயணமாக தமிழகம் வந்தடைந்த இலங்கை வவுனியா அய்யப்ப பக்தர்களுக்கு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இது குறித்து ராம.ரவிக்குமார் கூறியதாவது:

இலங்கை வவுனியா பகுதியில் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டு தமிழகம் வருகை 34 ஆண்கள் – 4தாய்மார்கள் உட்பட 38 பேர் நேற்று 6.1 .2017 விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை இந்து மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் தாம்பரம் சீனிவாசன் தலைமையில் சிறப்பாக வரவேற்று கடலூர் அனுப்பி வைத்தனர் .

கடலூர் வருகை தந்த சிவனடியார்களை மாவட்ட எல்லையில் இளைஞரணி மாநில செயலாளர் கடலூர் NR பரணீதரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் வரவேற்றனர்.
இரவு வழிபாடு முடித்து அன்னதானம் நடைபெற்றது.

இன்று புலர்காலை 7 மணிக்கு கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாட லீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் – வழிபாடு முடித்து சிதம்பரம் பயணித்தோம். காவல்துறை புடைசூழ சிதம்பரம் சென்றடைந்த அனைவரையும் சிவனடியார்கள் இந்து இயக்க பிரமுகர்கள் நமது நிர்வாகிகள் – அய்யப்ப தீட்சிதர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கிழக்கு கோபுரம் முன்பு அனைத்து இலங்கை சைவர்களுக்கும் பாத பூசை செய்து – மலர் தூவி – பொன்னாடை அணிவித்து அடியேன் அழைத்து சென்றேன். தில்லை நடராசர் சன்னதி முன்பு இலங்கை இந்து சைவர்கள் வருகையை தீட்சிதர்களிடம் கூறிய வுடன் தாய் உள்ளத் தோடு தீட்சிதர் பெருமக்கள் அனைத்து மக்களுக்கும் பிரார்த்தனை செய்து இரு நாட்டு உறவுகள் ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற வேண்டும் – இலங்கை மக்கள் அடிக்கடி சிதம்பரம் வாருங்கள். கப்பல் மூலம் வருகை தரும் இலங்கை சைவர்களை வரவேற்க தயாராக உள்ளோம் என்றனர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

அய்யப்ப ேஜாதி கண்ட உணர்வு சிதம்பரம் நடராஜர் தரிசனம் என்று ஆனந்தமாக கூறினர். அது மட்டுமல்லாது ஆடி_ ஆவணி மாதம் இலங்கையில் கதிர்காமம் முருகன் – நல்லூர் முருகன் கோவில் விழாவுக்கு கப்பல் மூலம் காங்கேசன்துறைக்கு வாருங்கள் என இலங்கை சைவ தமிழர் கள் வேண்டு கோள் விடுத்தது இரு நாட்டு உறவை மேலும் உறுதிப்படுத்தியது.

ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற்றால் தான் அரசியல் உறவு பலப்படும் .இதற்கு ஆன்மீக அரசியல் ஒரு வழியாக – தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி – வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories