திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குவளை. இங்கு நவகிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கிக் காட்சியளிப்பது தனிச் சிறப்பு.
மூவர் பாடிய இத்தலத்தில் வண்டமர் பூங்குழலி சமேத கோளிலிநாதர் அருள்புரிகிறார். கீழ்வேளூரிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் கச்சினத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.



