தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கரவனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தலமரம்.
மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியிலிருந்தும் வேளாங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத் தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.


