தஞ்சையிலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருக்காவூர்ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை திருக்கேவிலிலுள்ள ‘முல்லை வனநாதர் சுயம்பு மூர்த்தி லிங்கம்’ புற்று மண்ணினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்டுள்ள கோவில் இது மட்டும் தான்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது பிள்ளைப்பேறு சுகமாய் நடைபெற, இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி, கருவிலுள்ள சிசுவுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் பிரசவம் நடைபெறச் செய்வதால் இந்த அம்மனுக்கு ”கர்ப்பரட்சாம்பிகை” எனப் பெயர் உண்டாயிற்று.
குறிப்பு: படம் இந்தக் கோவிலின் படம் அல்ல.


