கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன்.
பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும் மகாசக்தியாக வீற்றருள்கிறார் இந்த பூதலிங்கர். இவரை வணங்கினால், பஞ்ச பூத தலங்களையும் (காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளஹஸ்தி, சிதம்பரம்) வணங்கிய பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல இறைவி, சிவகாமி.



