December 6, 2025, 7:41 AM
23.8 C
Chennai

மேட்டூர் அணையில் வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி!

nanthi-mettur

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு கீழே சரிந்ததால், நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர் தேங்கும் பகுதிகளாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. அப்போது அப்பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

கிராமங்களைக் காலி செய்து சென்ற மக்கள் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தினால் தெய்வக் குற்றம் ஏற்படும் எனக் கருதி, கோயில்களில் இருந்து கடவுள் சிலைகள், சிற்பங்களை மட்டும் எடுத்துச் சென்று தாங்கள் குடியேறிய பகுதிகளில் புதிய கோயில்களைக் கட்டிக் கொண்டனர்.

இதனால், பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பிரம்மாண்டமான நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயிலும், 100 அடி உயரக் கோபுரங்கள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயமும் நீர்த்தேக்கப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கு மேலே உயர்ந்தால் இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சரிந்தால் கோயில்கள் நீருக்கு மேலே தெரியத் தொடங்கும்.

கடந்த 14-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்ததால் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் நீருக்கு வெளியே தெரிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிந்ததால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த மிகப் பெரிய நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

நந்தி சிலை சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டதாகும். பல் ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் இந்த சிலை சேதம் அடையாமல் உள்ளது.

இதைக் காண செல்லும் பார்வையாளர்களும், இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் கற்களைப் பெயர்த்துச் செல்வதால் மட்டுமே சில இடங்களில் நந்தி சிலை பெயர்ந்து காணப்படுகிறது. நந்தியின் இடது காதுப் பகுதி உடைபட்டுள்ளது. நந்தி சிலையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து முடங்கி இருப்பதால் இப் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories