IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 20.04.2025

ரோஹித், கோலி அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் vs பெங்களூரு

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (157/6, பிரப்சிம்ரன் சிங் 33, ஷஷாங்க் சிங் 31, ஜோஷ் இங்கிஷ் 29, மார்கோ ஜேன்சன் 25, பிரியான்ஷ் ஆர்யா 22, க்ருணால் பாண்ட்யா 2/25, சுயேஷ் ஷர்மா 2/26, ஷெப்பர்ட் 1/18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.5 ஓவர்களில் 159/3, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 73, தேவதத் படிக்கல் 61, அர்ஷதீப் சிங், ஹர்பிரீத் ப்ரார், சாஹல் தலா ஒரு விக்கட்) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் முதல் நான்கு மட்டையாளர்களில் மூவர் சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை.

பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 22 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (17 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஜோஷ் இங்கிலிஷ் (17 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பொதுவாக பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் புவனேஷ் குமார், க்ருணால் பாண்ட்யா, சுயேஷ் ஷர்மா ஆகியோரின் பந்துவீச்சில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

நெஹல் வதேரா (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 1 ஃபோர்), மார்கோ ஜேன்சன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன்) இறுதியில் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.

          157 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி (54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் தேவதத் படிக்கல் (35 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

படிக்கல் இன்று அதிரடியாக ஆடினார்; கோலி அவருக்குப் பக்கபலமாக நின்றார். படிக்கல் ஆட்டமிழந்த பின்னர் ரஜத் படிதர் (12 ரன்), அவருக்குப் பின்னர் ஜிதேஷ் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) இருவரும் கோலியுடன் இணைந்து வீளையாடி, அணியை 18.5 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுக்க வைத்து வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். 

சென்னை vs மும்பை

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (176/5, ரவீந்தர் ஜதேஜா 53, ஷிவம் துபே 50, ஆயுஷ் மஹத்ரே 32, ஷேக் ரஷீத் 19, பும்ரா 2/25, தீபக் சாஹார், அஷ்வினி குமார், சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (15.4 ஓவர்களில் 177/1, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, சூர்யகுமார் யாதவ் 68, ரியன் ரிக்கிள்டன் 24, ரவீந்தர் ஜதேஜா 1/28) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

          பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடக் களமிறங்கிய சென்னை அணியில் இன்று முதல் முறையாகக் களமிறங்கிய ஆயுஷ் மஹத்ரே (15 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (32 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) தவிர பிற மட்டையாளர்கள் எவராலும் மும்பை அணியின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடமுடியவில்லை.

அதிக ரன் குவித்த ரவீந்தர் ஜதேஜா (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (20 பந்துகளில் 19 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 பந்துகளில் 5 ரன்) மற்றும் பிற வீரர்களான எம்.எஸ். தோனி (6 பந்துகளில் 4 ரன்), ஓவர்டன் (3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 ரன்) ஆகியோர் மும்பை பந்துவீச்சாளர்களை அதிரடியாக அடித்து ஆட்டமுடியவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

          177 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (45 பந்துகளில் 76 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) இம்பாக்ட் பிளேயராக, தொடக்கவீரராகக் களமிறங்கினார்.

அவர் முதலில் ரியன் ரிக்கிள்டன் (19 பந்துகளில் 24 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடனும் பின்னர் சூர்யகுமார் யாதவ் (30 பந்துகளில் 68 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) உடனும் இணைந்து ஆடி 15.4 ஓவர்களில் அணிக்கு ஒரு விக்கட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து, வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்னை அணி இனி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவியலாது.

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

image 1 - 2026

20.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்

அணிமேட்ச்வெற்றிதோல்விபுள்ளிநெட் ரன் ரேட்
குஜராத்752100.984
டெல்லி752100.589
பெங்களூரு853100.177
பஞ்சாப்853100.065
லக்னோ853100.088
மும்பை84480.483
கொல்கொத்தா73460.547
ராஜஸ்தான்8264-0.633
ஹைதராபாத்7254-1.217
சென்னை8264-1.392

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories