நொடியில் அபேஸ் ஆன மினி லாரி! டீசல் தீர்ந்ததால் அம்போ என விட்டுட்டு போன திருடன்!

minilory - 2026

ஈரோடு மாவட்டத்தில் திருடிச் சென்ற மினி லாரியில் டீசல் இல்லாததாலும், டீசல் போட கையில் பணம் இல்லாததாலும் அதை அப்படியே சாலை ஓரத்தில் திருடிய நபர் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சொந்தமாக மினி லாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல தன்னுடைய மினி லாரியை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார்.

காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு மினி லாரி இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறை புகார் செய்தார்.

வழக்குப் பதிவு செய்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை யினர் ரவியின் மினி லாரியை தேடி வந்தனர். மேலும், நண்பர்கள் மூலமாகவும் வண்டியைத் தேடி வந்தார் ரவி. அப்போது அவருடைய நண்பர் ஒருவர் “உன்னுடைய மினி லாரியை கோவை இடுகம்பாளையம் ரோட்டில் பார்த்தேன். நீண்ட நேரமாக அங்கேதான் இருக்கிறது” என்று தகவல் கொடுத்துள்ளார்.

இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரவி இடுகம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கே அவருடைய மினி லாரி நின்றுகொண்டிருந்தது. யாரும் வண்டிக்கு உரிமைகோரியபடி வரவில்லை.

காவல்துறையினர் வண்டியை எடுக்க முயன்ற போது வண்டியில் டீசல் இல்லை என்பது தெரிந்தது. டீசல் இல்லாததால் வண்டியை திருடிய நபர் அதை சாலையில் நிறுத்திச் சென்ற விவரம் அவர்களுக்கு புரிந்தது. வண்டியை ரவியிடம் ஒப்படைத்த காவல்துறையினர், மினி லாரியை திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories