வியாழன் அன்று நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தை தங்க யானை வாகன புறப்பாடு பற்றிய காணொளி மற்றும் கடைசியில் அதை உருவாக்கிய கலைஞர் செல்வம் என்கிற செல்வராஜ், தங்க ஐராவத யானையின் அமைப்பு மற்றும் அதற்க்கு 12 கண்கள் இருப்பதை பற்றிய சிறு பேட்டி ..
எப்படி அரங்கன் இந்த யானை வாகனம் உருவானபோது நடத்திக் காட்டினான் என்று நம்பெருமாள் பெருமையை பற்றிச் சொல்கிறார் இதில் ..
இவர்தான் புதிதாக நம்பெருமாளுக்கு செய்யப்பட்ட தங்க குதிரை மற்றும் யாளி , கல்பக விருக்ஷம் ஆகியவற்றைச் செய்தவர்
- விஜயராகவன் கிருஷ்ணன்