Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அரசு வழக்கறிஞர்களை அரசியல் காரணங்களுக்காக நியமிக்கக் கூடாது: நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

அதிமுக.,வினரை கனிமொழி எப்படிப் பார்க்க விரும்புகிறார் தெரியுமா?

இது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக.,வினரை மீசையின்றி பாா்க்க விரும்பவில்லை என்று கூறினார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை: சந்தானம் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆஜராக திவாகரனுக்கு சம்மன்

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.

வட இந்தியாவில் கொளுத்தி எடுக்கும் வெயில் உக்கிரம்: தீ எரிவது போல் தெரிந்த நாசாவின் சாட்டிலைட் படங்கள்

நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.

‘மனநலம் பாதிக்கப்பட்ட’ திவாகரனால் மீண்டும் உயிர்த்தெழுந்த அம்மா அணி! பொதுச் செயலாளர் ‘அவரே’!

அதிமுக.,வையும் ஆட்சியையும் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகளைச் செய்த சசிகலா குடும்பம், இப்போது அனைத்தையும் இழந்து சிதறிப்போய்க் கிடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பழிவாங்குகின்ற ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்று இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை மீட்பு, அதிமுக., கட்சி அலுவலகம் மீட்பு, அதிமுக மீட்பு என்றெல்லாம் இயங்கிய சசிகலா குடும்பம், இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகியுள்ளது.

கதுவா சம்பவ நெருக்கடி: ஜம்மு காஷ்மீர் புதிய துணை முதல்வர் பொறுப்பேற்பு

ஜம்மு- காஷ்மீரில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவ நெருக்கடி காரணமாக துணை முதல்வர் பதவியை நிர்மல் சிங் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு ஆளாகும் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ்: தில்லிக்கு அழைத்தார் மோடி!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக., முதல்வர் பிப்லப் குமார் தேவை தில்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, மோடி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

பீடா கடை வெச்சாவது பொழச்சிக்கோங்க; அரசு வேலைன்னு சுத்தாதீங்க: சர்ச்சை ஆக்கப்பட்ட திரிபுரா முதல்வரின் அறிவுரை

அவர் தெரிவித்த யோசனையைத்தான் சினிமாக்களிலும் ஊடகங்களிலும் பலரும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சுய தொழில் தொடங்கி இளைஞர்கள் சொந்தக் காலில் நிற்கப்பழக வேண்டும் என்று ஊடகங்களில் சொல்லப் படும் அறிவுரையானது, ஒரு முதல்வரால் சொல்லப் படும் போது அதே ஊடகங்களில் இளைஞர்களை மாடு மேய்க்கச் சொல்கிறார் ஒரு முதலமைச்சர் என்று சர்ச்சையாக்கப்படும் என்பது பிப்லப் குமார் தேவுக்கு தெரியாமல் போயுள்ளது.

பச்சை பட்டு ஜொலிக்க… பக்தர் குரல் அதிர… வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை மக்கள் கள்ளழகர் மேல் காட்டும் பக்தியும் அன்பும் சொல்லில் வடிக்க இயலாதது என்று எண்ணும்படி, ஆட்டமும் பாட்டமுமாக, அழகரை வரவேற்று மாலைகளும் நிவேதனங்களும் அளித்து தங்கள் ஒரு வருட காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.

அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டது: மோடி பெருமிதம்

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வெற்றிபெற கேம்பிரிட்ஸ் அனலிடிகா கொடுத்த பகீர் திட்டங்கள்! வெளிநாட்டு சதியை இந்திய சமூகம் முறியடிக்குமா?

காஷ்மீர் கதுவா சிறுமி பாலியல் விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நடக்கும் போராட்டங்கள் வரை, இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள பாஜக., தன் வழிகளைக் கையாள்கிறது. நீதித்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலகம் விளைவித்தார்கள். நீதிபதியை பதவியிறக்க மனு போட்டார்கள். எல்லாமே இந்த அரசியல் சதித் திட்டமிடலின் ஓர் அங்கம்தான் என்கிறார்கள்.

Categories