December 5, 2025, 7:53 AM
24.9 C
Chennai

பச்சை பட்டு ஜொலிக்க… பக்தர் குரல் அதிர… வைகையில் இறங்கிய கள்ளழகர்!

Madurai Kallazagar Vaigai river - 2025

மதுரை: சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, மதுரைக்கு எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை மலை அழகர், இன்று காலை பக்தர்களின் கோவிந்த கோஷம் அதிர முழங்க வைகையில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதுரையில் சித்திரைத் திருவிழா நிறைவை அடைந்துள்ளது. அதன் ஓர் அம்சமாக, அழகர்கோவில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளி வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, வைகை ஆற்றில் இறங்குவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை நகரில் திரண்டனர்.

சித்திரை மாத வெயில்காலம் என்பதால், பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, அன்பர்கள் உடல் குளிர, அடியவர் உளம் குளிர கள்ளழகரை வரவேற்றனர். முன்னதாக, கள்ளழகரை எதிர்கொள்ள வீரராகவப் பெருமாள் வைகையில் காத்திருந்தார். தொடர்ந்து, செழுமையைக் காட்டும் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அப்போது கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கம் அதிர முழங்கியது.

மதுரை மக்கள் கள்ளழகர் மேல் காட்டும் பக்தியும் அன்பும் சொல்லில் வடிக்க இயலாதது என்று எண்ணும்படி, ஆட்டமும் பாட்டமுமாக, அழகரை வரவேற்று மாலைகளும் நிவேதனங்களும் அளித்து தங்கள் ஒரு வருட காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.

தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டிருந்தபோதும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 5,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப் பட்டிருந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வைகைக் கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்திருந்தனர். எங்கும் ஒளி வெள்ளமாகக் காட்சி அளித்தது. மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories