Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மதுவுக்கு எதிராக மாணவர் தற்கொலை: இனியாவது தமிழக அரசு திருந்துமா?

அரசின் முடிவுக்காக காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்கா ஆலை விவகாரம்: தமிழர்களின் உயிரோடு விளையாடும் திமுக., அதிமுக., கட்சிகள்!

சென்னை: கோவை குட்கா ஆலை விவகாரத்தில், தமிழர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் திமுக., மற்றும் அதிமுக., இரண்டு கட்சிகளும் என்கிறார்கள் அப்பகுதியினர். காரணம், இதில் அமைச்சர்கள், ஆளும் தரப்பினர், காவல் துறை உயரதிகாரி...

செல்போன் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை!

அந்த விதத்தில், அரசின் சார்பில் வழங்கப் படும் அடையாள ஆவணச் சான்றுகளான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டும் இனி சிம் கார்டு வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப் பட்டுள்ளது.

மோடி பேச்சை ஹிந்தியிலேயே கேட்க ஆசைப்பட்ட கன்னடர்கள்!

கர்நாடகாவில், கன்னட மொழியை மையமாக வைத்து அரசியல் ரீதியாக காங்கிரஸ் பலன் பெற பல்வேறு பிரிவினை கருத்துகளைத் தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் கன்னடர்கள், தாங்கள் மோடியின் ஹிந்திப் பேச்சை தொடர்ந்து கேட்க விரும்புவதாகக் கூறி

கர்நாடகாவில் வீசுவது பாஜக அலை அல்ல; சூறாவளி: முதல் நாளிலேயே போட்டுத் தாக்கிய மோடி!

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் இப்போது செய்துள்ளோம். நமது நாட்டின் உண்மையான வரலாறே தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்குக்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை.

என்னல்லாம் செய்திருக்கீங்க… 15 நிமிடம் பேப்பர் இல்லாம மடமடன்னு பேசுங்க பார்ப்போம்: மோடி விட்ட சவால்!

"இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது தாய் மொழியில் ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருந்தார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் வேலைக் காரர்கள்" என்று கூறியுள்ளார் மோடி.
- 2026

புதுவை ஆளுநர் கிரண் பேடியை முற்றுகையிட முயற்சி: காங்கிரஸார் கைது!

இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார். 

உப்புக்கு வரி போட்ட கதை தெரியுமா? உப்பு போட்டு சாப்பிட்டால் உடனே தெரியும்!

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச் சென்று 67 ஆண்டுகள் ஆகியும், நமது அடிமைத்தனம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. உப்புக்கு வரி விதித்ததற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில், நமது அரசே, நம் நாட்டின் சாதாரண உப்பை விற்கத் தடை விதித்தது. அறிவுஜீவிகள் சிலரோ அயோடின் கலந்த உப்பையே விற்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

அரசு வழக்கறிஞர்களை அரசியல் காரணங்களுக்காக நியமிக்கக் கூடாது: நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

அதிமுக.,வினரை கனிமொழி எப்படிப் பார்க்க விரும்புகிறார் தெரியுமா?

இது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக.,வினரை மீசையின்றி பாா்க்க விரும்பவில்லை என்று கூறினார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை: சந்தானம் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆஜராக திவாகரனுக்கு சம்மன்

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.
- 2026

Recent articles

spot_img