புதுவை ஆளுநர் கிரண் பேடியை முற்றுகையிட முயற்சி: காங்கிரஸார் கைது!

kiran bedi - 2026

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மோதலும், அதிகாரப்போட்டியும் நடைபெற்று வருகிறது.

துணை நிலை ஆளுநராக, சிலவற்றில் தனக்கு முழு அதிகாரம் உண்டு என்று கூறுகிறார் கிரண்பேடி.  ஆளுங்கட்சியைக் கலந்து ஆலோசிக்காமல், சட்டமன்றத்திற்கு பாஜக.வைச் சேர்ந்த 3 பேரை நியமன உறுப்பினர்களாக அறிவித்தார். தொடர்ந்து, நேரடியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடுவது, பொதுமக்களிடம் குறை கேட்பது, அதுகுறித்து ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பது என்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  இதனால் ஆளுங்கட்சிக்கும் அவருக்கும் மட்டுமல்ல, பிற அரசியல் வாதிகளுக்கும் கூட நெருக்கடி அதிகரித்து, ஆளுநருக்கு எதிராக போர்க்கொடிதூக்கி வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், முத்திரையர்பாளையத்தில் ஆய்வு செய்வதற்காக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று காலை வந்திருந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸார் முடிவு செய்திருந்தனர். அதன்படி,  கிரண்பேடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories