January 19, 2025, 9:51 AM
25.7 C
Chennai

புதுவை ஆளுநர் கிரண் பேடியை முற்றுகையிட முயற்சி: காங்கிரஸார் கைது!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மோதலும், அதிகாரப்போட்டியும் நடைபெற்று வருகிறது.

துணை நிலை ஆளுநராக, சிலவற்றில் தனக்கு முழு அதிகாரம் உண்டு என்று கூறுகிறார் கிரண்பேடி.  ஆளுங்கட்சியைக் கலந்து ஆலோசிக்காமல், சட்டமன்றத்திற்கு பாஜக.வைச் சேர்ந்த 3 பேரை நியமன உறுப்பினர்களாக அறிவித்தார். தொடர்ந்து, நேரடியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடுவது, பொதுமக்களிடம் குறை கேட்பது, அதுகுறித்து ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பது என்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  இதனால் ஆளுங்கட்சிக்கும் அவருக்கும் மட்டுமல்ல, பிற அரசியல் வாதிகளுக்கும் கூட நெருக்கடி அதிகரித்து, ஆளுநருக்கு எதிராக போர்க்கொடிதூக்கி வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், முத்திரையர்பாளையத்தில் ஆய்வு செய்வதற்காக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று காலை வந்திருந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸார் முடிவு செய்திருந்தனர். அதன்படி,  கிரண்பேடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.