வட இந்தியாவில் கொளுத்தி எடுக்கும் வெயில் உக்கிரம்: தீ எரிவது போல் தெரிந்த நாசாவின் சாட்டிலைட் படங்கள்

nasa pic india fire - 2026

புது தில்லி: வட இந்தியாவில் இப்போதே வெயில் கொளுத்தி எடுக்கத் துவங்கியுள்ளது. வெயில் உக்கிரத்தால் பல இடங்களில் தீ எரிவது போல் கனல் கக்குகின்றது. இது நாசாவின் புகைப்படங்களிலும் எதிரொலித்துள்ளது. கடந்த 10 நாட்களில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவதுபோல் சிவப்புப் புள்ளிகளாகத் தெரிகின்றன.

இந்த சிவப்பு நிறத் தீப் புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங் கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டைக் காட்டுவதாகவும் இருக்கலாம். அல்லது, அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.

நாசா கோடர்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் செண்டரின் விஞ்ஞானி ஹிரேன் ஜேத்வா இது குறித்துக் கூறியபோது, மத்திய இந்தியாவில் காணப்படும் இந்த சிவப்புப் புள்ளிகளானது தெளிவாகத் தெரிகிறது. இவை பெரும்பாலும் காய்ந்த பயிர்களை எரிப்பதால் தெரியும் தீயாக இருக்கும். காட்டுத் தீ என்றால் அதிகம் புகை மூட்டமும் தீ பரவலாக்கமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத் தீ என்றால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு கூடும். புகை மண்டலமாகும். ஆனால், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.

1 COMMENT

  1. பாவம் விவசாயிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories