அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டது: மோடி பெருமிதம்

Published:

modi speech in london6 - 2026இந்தியா

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் ஆயிரம் தினங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். தீனதயாள் உபத்யாயா கிராம்ஜோதி யோஜ்னா திட்டம் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது, அதுவும் நிர்ணயித்த காலத்துக்கும் முன்னதாக!

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப் பட்டிருப்பதாகவும், நிறைவாக நேற்று மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் லீசாங் என்ற மலைகிராமம் மின்வசதி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

அதில் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் நேற்றைய தினம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று  குறிப்பிட்டுள்ளார். நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்டதாக கூறியுள்ள மோடி, ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து கிராமங்களும் மின்சார வசதி பெற உழைத்த அனைத்து ஊழியர்களையும் , அலுவலர்களையும் வணங்குவதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img