பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
திரிஷா பிறந்த நாளை டிவிட்டரில் கொண்டாடும் இணைய ரசிகர்கள்
திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு என்றே ஒரு ஹாஷ் டாக் உருவாக்கப் பட்டு, அது டிரெண்டிங்கில் விடப்பட்டது. #HappyBirthdayTrisha என்ற அந்த ஹாஷ் டாக் போட்டு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவிடம் ‘ஜெ’ சிடிக்கள் நிறைய இருக்கும்: அதில் ஒன்றைத் திருடி வெளியிட்டு தினகரன் ஆர்கே.நகரில் வென்றார்: திவாகரன்
இந்நிலையில், சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை திருடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் மேலும் பல சிடிக்கள், சசிகலாவிடம் இருக்கலாம் என்று ஒரு தகவலையும் கூறினார்.
16 ஆயிரம் கிராமங்கள்; 2022க்குள் வளர்ச்சி இலக்கு: நிர்மலா சீதாராமன்
விருதுநகர்: மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என்று ஆய்வு செய்ததாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர்...
திருநாவுக்கரசரும், ஸ்டாலினும் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக.,வின் செயல் தலைவருமான ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக., ஆளும் மாநிலங்களில் மக்களும், காங். மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்: மோடி
பாஜக., எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார் மோடி.
அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆதார் முறை உகந்தது: சொல்பவர் பில்கேட்ஸ்
ஆதார் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம் எனக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், பிற நாடுகள் ஆதார் நடைமுறையை அப்படியே பின்பற்றுவதற்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ரயில் கழிப்பறையில் வைத்து டீ கலந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
அதன்படி, வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல் - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது 2017 டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இது குறித்து வந்த புகாரை அடுத்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது.
கழிப்பறையில் டீ கேனில் பச்சை தண்ணீர் கலந்து விற்பனை
கழிப்பறையில் டீ கேனில் பச்சை தண்ணீர் கலந்து விற்பனை ஒரு லட்சம் அபராதம்
’காந்தி’ பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த இன்றைய ‘காந்தி’கள்
தங்கள் பெயரில் காந்தியை வைத்துக் கொண்டுள்ள நேரு குடும்ப வாரிசுகளான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
பி.இ. படிப்புக்கு ஆன்லைன் மட்டுமே விண்ணப்பம்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
காவிரியை தேர்தல் அரசியல் ஆக்கிய கர்நாடக காங்கிரஸுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
காவிரி குறித்த வழக்கு மே.3 ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.
