December 6, 2025, 6:31 AM
23.8 C
Chennai

என்னை மன்னித்து விடுங்கள் ஸ்நேகா: பகிரங்கமாகக் கேட்ட மோகன் ராஜா

மோகன்ராஜா இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் இயக்கிய வேலைக்காரன் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில், சினேகா வரும் காட்சிகள் சில நிமிடங்களே வந்ததால் வருத்தத்தில் பொங்கித் தீர்த்தார் ஸ்நேகா. அதற்காக இயக்குனர் மோகன்ராஜா மன்னிப்பு கோரியுள்ளார்.

அண்மையில் திரைக்கு வந்த வேலைக்காரன் படம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடித்து, மோகன்ராஜா இயக்கி வெளிவந்தது. இந்தப் படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு மிகப் பெரிய சமூகச் செய்தியைச் சொல்ல தன்னை வருத்தி நடித்திருந்தார் ஸ்நேகா. 18 நாட்கள் ஸ்னேகாக நடித்துக் கொடுத்திருந்தும், படத்தில் வந்ததென்னவோ சில நிமிடக் காட்சிகள் தான். இதனால் ஸ்னேகா வருத்தத்துடன், தனக்கு இது போல் இதுவரை அவமானம் நேர்ந்ததில்லை, என் வாழ்நாளில் நான் அடைந்த பெரிய அவமானம் இது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காட்சிகள் குறைக்கப்பட்டதற்காக இயக்குனர் மோகன்ராஜா, ஸ்னேகாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

ஸ்னேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவரது காட்சிகள் மட்டுமல்ல வேறு சிலரின் காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு உண்டு. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யவில்லை. கதைப்படி ஸ்னேகாவின் கதை 90 நாள் நடப்பதாக இருக்கும், இதற்காக நிறைய காஷ்ட்யூம் அணிந்து அவர் நடிக்க வேண்டியிருந்தது.

முகத் தோற்றத்திலும் நிறைய மாறுதல் காட்ட வேண்டியிருந்தது. அவரது காட்சிகள் பெரும்பாலும் மாண்டேஜ் டைப்பிலானது. இதற்காகத்தான் அவர் அதிக நாள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றைக்கு அவரது கேரக்டர் தான் முதலில் பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றாலும் நாங்கள் தவறு செய்திருப்பதாக ஸ்னேகா கருதினால் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories