மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை மறுதினத்திற்குள் 4 மாவட்டங்களிலும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவு இட்டிருக்கிறார்.
இதை அடுத்து, மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியானது. டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நாளை(டிச.,11) துவங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை துவங்க விருந்த அரையாண்டுத் தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு தள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவைணயை வெளியிடவும், 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்தும், நாளை மறுநாளுக்குள் 4 மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்கள், பள்ளிச்சீருடைகள் ஆகியவற்றை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. டிச.,13 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது