ஜன.28: பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் ஜெயந்தி!

Published:

Lala Lajpat Rai - 2026

பஞ்சாப் கேசரியாக புகழ் பெற்ற தேசிய போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பஞ்சாபிலுள்ள ஜாக்ரான் நகரில் 1865 ஜனவரி 28 ல் பிறந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி லாலா லஜபதி ராய்க்கு இன்று அஞ்சலி செலுத்தினார் . லாலா லஜபதிராய் நாட்டிற்குச் செய்த சேவைகள் மக்கள் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பவை என்றார். பாரதமாதாவின் சாகச புதல்வர், பஞ்சாப் கேசரி, லாலா லஜபதிராய் ஜெயந்தி சந்தர்ப்பத்தில் அவருக்கு சல்யூட். அவர் செய்த தியாகங்கள் என்றும் வணங்கி போற்றத் தக்கவை என்று ட்விட் செய்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் லாலா லஜபதிராய் ஒரு அசாதாரணமான தலைவர். மார்க்கதரிசி. உண்மையான தேசியவாதி என்று போற்றினார்.

1920 ஆம் ஆண்டு லாலாலஜபதிராய் தலைவராக ஆல் இந்தியா டிரேட் யூனியன் எஐடியுசி ஏற்படுத்தப்பட்டது. ஹிந்து மகாசபை, லோக் சேவா மண்டல் அமைப்புகளை ஆரம்பித்தார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

இவர் சிறந்த எழுத்தாளர். ஆரிய சமாஜ், யங் இந்தியா, அன் ஹேப்பி இந்தியா, இங்கிலாந்து டெப்ட் டு இந்தியா போன்ற நூல்களை எழுதினார்.

சைமன் கமிஷனுக்கு எதிராக லாகூரில் நடந்த போராட்ட ஊர்வலத்தில் போலிஸார் நடத்தி தடியடியில் காயமடைந்து 1928 நவம்பர் 17 அன்று காலமானார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img