நாட்டின் இரண்டாவது தலைநகரம் அமராவதி: ஜெகனுக்கு பாஜக., அதிர்ச்சி வைத்தியம்!

Published:

modi amitshaa - 2026
  • நாட்டின் இரண்டாவது தலைநகர் அமராவதியா?
  • ஒய்சிபிக்கு பிஜேபி அதிர்ச்சி வைத்தியம்.
  • மத்திய அரசின் பரபரப்பு ஆலோசனை.

ஆந்திரப் பிரதேச அரசியல், தலைநகரங்களைச் சுற்றி வரும் நிலையில் மறுபுறம் மத்திய அரசின் மனத்தில் மற்றுமொரு எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.

அமராவதியை ஒரு தலைநகராக இருத்திய படியே அதிகார விரிவாக்கம் என்ற பெயரில் எக்ஸிக்யூட்டிவ் தலைநகராக விசாகப்பட்டினம், ஜூடிசியல் தலைநகராக கர்னூல் இருக்கும் என்று ஆந்திர அரசு மசோதா எடுத்துவந்து சட்ட மேலவையில் ஒப்புதல் கிடைக்கச் செய்தது. ஆனால் மத்திய அரசு ஒய்சிபி.,க்கு டிவிஸ்ட் அளிக்க முடிவு செய்து காய்களை நகர்த்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

amaravathi - 2026

தென்னிந்திய மாநிலங்களில் பாஜக., நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் யாரும் யூகிக்க முடியாத ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு பிஜேபி தயாராகி வருகிறது. நாட்டின் இரண்டாவது தலைநகர் குறித்து தீவிர ஆலோசனையில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளன என்று கூறப்படுகிறது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

நாட்டின் இரண்டாவது தலைநகர் தென்னிந்தியாவில் இருக்க வேண்டுமென்று அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை அது போன்ற ஒரு யோசனையை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. இது கொஞ்சம் சிரமமே என்றாலும் தற்போது பாஜக., அதனை செயல்படுத்த முயற்சிக்கிறது. அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமராவதியை தேர்ந்தெடுத்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு முதலில் ஹைதராபாத் மீது பார்வை திரும்பியது. ஆனால் வரலாறு கலாச்சாரம் கடல்தீரம் தட்பவெட்பம் போன்ற அம்சங்களில் அமராவதி ஏற்றதாக இருக்கும் என்று முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் தென்னிந்தியாவையும் பெரிய அளவில் வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்தோடு மோடி அரசு உள்ளது.

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் சில திட்டங்களால் முன்னேற்றம் கண்டுள்ளன. அதே நேரம், தெலுங்கு மாநிலங்கள் பிரிந்து போனபின் ஆந்திராவுக்கு நிதி நிலைமை போதாமல் உள்ளது. அதனால் அமராவதியை இரண்டாவது தலைநகராக அறிவித்து அரசியலிலும் தென்னிந்தியாவில் தங்களுக்கு ஒரு நிலையான இடம் கிடைக்க பிஜேபி முயற்சிப்பதாக தெரிகிறது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img