புது தில்லி:
ஜூன் 11ம் தேதி, இதுவரை விடுபட்ட பொருள்களுக்கான ஜிஎஸ்டி., வரியை இறுதி செய்யும் கூட்டம் நடைபெறுகிறது.
ஜூலை 1ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக, அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி., சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். ஜிஎஸ்டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என நான்கு விதமாத வரிவிதிப்பு முறைகள் உள்ளன.
ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகவுள்ள ஜிஎஸ்டி., இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும்; ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாமானிய மனிதனுக்கு பெரிதும் பயனளிக்கும் – என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கான கவுன்சில் கூட்டம் தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இந்தக் கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட பொருள்களில் இருந்து விடுபட்டவற்றுக்கான வரிகளை இறுதி செய்யும் அடுத்த கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி நடைபெறுகிறது.