February 21, 2026, 11:20 PM
26.7 C
Chennai

இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

HinduMuslim couple denied room in Bengaluru Hotel - 2026

பெங்களூர்:
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஷபீக் சுபைதா- டி.வி. திவ்யா. இவர்கள் இருவரும் வேலை நிமித்தமாக பெங்களூர் வந்தனர்.  பெங்களூரில் உள்ள அண்ணாபுரம் மெயின் ரோட்டில் ஆலிவ் ரெசிடன்சி உள்ளது. இந்த ரெசிடன்சி ஹோட்டலில் தாங்கள் தங்குவதற்கு அறை வேண்டும் என்று ஷபீக், திவ்யா இருவரும் நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால், ரெசிடன்சி நிர்வாகம் அறை தர மறுத்துவிட்டதாம்.

இந்நிலையில், ஷபீக் பெயர் முஸ்லீமாக உள்ளதாலும், திவ்யா பெயர் இந்துவாக உள்ளதாலும் அறை தரமுடியாது என்று மறுத்ததாக முதலில் குற்றம் சாட்டிய இருவரும், பின்னர், ஷபீக் முஸ்லிம் என்பதால் அவருக்கு அறை தர முடியாது என மறுத்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இதனை குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் சண்டையிட்டபோது, அதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு அறை தருவதாக ரெசிடன்சி நிர்வாகம் கூறியதாக ஷபீக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், இது குறித்து ரெசிடன்சி நிர்வாகம் தரப்பில் கூறியபோது, அவர்கள் இருவரும் அடையாளச் சான்றிதழை வழங்க மறுத்தனர். அதனாலேயே அறையை ஒதுக்க ரெசிடன்சி நிர்வாகம் மறுத்தது. வெவ்வேறு மதத்தின் காரணமாக தம்பதிக்கு அறை மறுக்கப்படவில்லை.  அவர்கள் துவக்கத்தில் அரை மணி நேரம் அறை வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் மறுத்து விட்டோம். பிறகு ஒரு நாளுக்கு அறை வேண்டும் என்று கோரினர். ஷபீக் மற்றும் திவ்யா இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். ஆனால், அவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என ரெசிடன்சி  தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories