இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

HinduMuslim couple denied room in Bengaluru Hotel - 2026

பெங்களூர்:
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஷபீக் சுபைதா- டி.வி. திவ்யா. இவர்கள் இருவரும் வேலை நிமித்தமாக பெங்களூர் வந்தனர்.  பெங்களூரில் உள்ள அண்ணாபுரம் மெயின் ரோட்டில் ஆலிவ் ரெசிடன்சி உள்ளது. இந்த ரெசிடன்சி ஹோட்டலில் தாங்கள் தங்குவதற்கு அறை வேண்டும் என்று ஷபீக், திவ்யா இருவரும் நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால், ரெசிடன்சி நிர்வாகம் அறை தர மறுத்துவிட்டதாம்.

இந்நிலையில், ஷபீக் பெயர் முஸ்லீமாக உள்ளதாலும், திவ்யா பெயர் இந்துவாக உள்ளதாலும் அறை தரமுடியாது என்று மறுத்ததாக முதலில் குற்றம் சாட்டிய இருவரும், பின்னர், ஷபீக் முஸ்லிம் என்பதால் அவருக்கு அறை தர முடியாது என மறுத்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இதனை குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் சண்டையிட்டபோது, அதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு அறை தருவதாக ரெசிடன்சி நிர்வாகம் கூறியதாக ஷபீக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், இது குறித்து ரெசிடன்சி நிர்வாகம் தரப்பில் கூறியபோது, அவர்கள் இருவரும் அடையாளச் சான்றிதழை வழங்க மறுத்தனர். அதனாலேயே அறையை ஒதுக்க ரெசிடன்சி நிர்வாகம் மறுத்தது. வெவ்வேறு மதத்தின் காரணமாக தம்பதிக்கு அறை மறுக்கப்படவில்லை.  அவர்கள் துவக்கத்தில் அரை மணி நேரம் அறை வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் மறுத்து விட்டோம். பிறகு ஒரு நாளுக்கு அறை வேண்டும் என்று கோரினர். ஷபீக் மற்றும் திவ்யா இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். ஆனால், அவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என ரெசிடன்சி  தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories