இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

HinduMuslim couple denied room in Bengaluru Hotel - 2026

பெங்களூர்:
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஷபீக் சுபைதா- டி.வி. திவ்யா. இவர்கள் இருவரும் வேலை நிமித்தமாக பெங்களூர் வந்தனர்.  பெங்களூரில் உள்ள அண்ணாபுரம் மெயின் ரோட்டில் ஆலிவ் ரெசிடன்சி உள்ளது. இந்த ரெசிடன்சி ஹோட்டலில் தாங்கள் தங்குவதற்கு அறை வேண்டும் என்று ஷபீக், திவ்யா இருவரும் நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால், ரெசிடன்சி நிர்வாகம் அறை தர மறுத்துவிட்டதாம்.

இந்நிலையில், ஷபீக் பெயர் முஸ்லீமாக உள்ளதாலும், திவ்யா பெயர் இந்துவாக உள்ளதாலும் அறை தரமுடியாது என்று மறுத்ததாக முதலில் குற்றம் சாட்டிய இருவரும், பின்னர், ஷபீக் முஸ்லிம் என்பதால் அவருக்கு அறை தர முடியாது என மறுத்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இதனை குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் சண்டையிட்டபோது, அதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு அறை தருவதாக ரெசிடன்சி நிர்வாகம் கூறியதாக ஷபீக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், இது குறித்து ரெசிடன்சி நிர்வாகம் தரப்பில் கூறியபோது, அவர்கள் இருவரும் அடையாளச் சான்றிதழை வழங்க மறுத்தனர். அதனாலேயே அறையை ஒதுக்க ரெசிடன்சி நிர்வாகம் மறுத்தது. வெவ்வேறு மதத்தின் காரணமாக தம்பதிக்கு அறை மறுக்கப்படவில்லை.  அவர்கள் துவக்கத்தில் அரை மணி நேரம் அறை வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நாங்கள் மறுத்து விட்டோம். பிறகு ஒரு நாளுக்கு அறை வேண்டும் என்று கோரினர். ஷபீக் மற்றும் திவ்யா இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். ஆனால், அவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என ரெசிடன்சி  தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி, பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories