spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமணமகளின் மாமாவை சுட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமகளின் மாமாவை சுட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

- Advertisement -
gun
gun

திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் பெண்ணின் உறவினர் காயமடைந்ததால் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்த, மணமகனின் காரை அடித்து நொறுக்கியதுடன் அவரின் உறவினர்களை அடித்து விரட்டி பெண் வீட்டார் சிறைபிடித்த சம்பவத்தால் திருமண வீடு கலவர வீடாக மாறியது.

இந்தியாவில் தற்போது திருமண சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள் என்பது தற்போது சினிமாக்களை மிஞ்சும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர், அதிரடி ஆக்‌ஷன் கொண்டதாக மாறிவிட்டன. கடைசி நேரங்களில் திருமணங்களை நிறுத்தி மணப்பெண்கள் அதிர வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், தற்போது அதையும் தாண்டி திருமண வீடு ஒன்று கலவர வீடாக மாறியிருக்கும் சம்பவத்தை வைத்து புதிதாக ஒரு சினிமா படமே எடுத்துவிடலாம் என்ற வகையில் அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த புதன் கிழமை இரவு 22 வயதான இராம் என்ற பெண்ணுக்கும், ஷாசத் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வின் போது துப்பாக்கிசூடு நடத்துவது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த திருமணத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர். இதில் தவறுதலாக மணமகளின் மாமாவுக்கு குண்டு காயம் ஏற்பட்டு விட்டது. அவர் ரத்த காயங்களுடன் சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என மணப்பெண் அறிவித்தார். ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் மணமகனின் குடும்பத்தினர் இது போன்று நடந்து கொண்டால், நான் திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் நேரத்தில் அக்குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள்? என்னால் எப்படி இந்த திருமணத்தை செய்ய முடியும் என மணப்பெண் கேள்வி எழுப்பினார்.

மணமகளின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், வெகுண்டெழுந்த அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மணமகனின் காரை சூறையாடினர். அவரின் உறவினர்களை அடித்து தாக்கியதுடன் அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து வைத்திருந்தனர். அந்த திருமண வீடே கலவர வீடாக காட்சியளித்தது.

பின்னர் தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட மணமகன் வீட்டார் விடுவிக்கப்பட்டு நிலைமையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மணமகளின் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது உரிமம் பெற்ற துப்பாக்கியா எனவும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe