இணைய ஆட்சிமுறை மாநாட்டுக்காக பிரதமர் மோடி டுவிட்டரில் உரை

narendramodi சமூக ஊடகம் சமீபத்திய தொழில்நுட்ப முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் 18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டிற்கு டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை. இது போன்ற ஒரு உரை டுவிட்டர் மூலம் நடப்பது இதுவே முதல் முறை. டுவிட்டரில் பிரதமர் எழுதியுள்ளது: “வணக்கம் நண்பர்களே!. டுவிட்டர் மூலம்18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டில் இணைவதை நினைத்து நான் பெருமையடைகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினேன், ஆனால் முடியவில்லை. எனினும், நான் உங்களோடு உரையாடும் வாய்ப்பை தவற விடமாட்டேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் உங்களோடு இணைவது எவ்வாறு என்று நான் சிந்தித்தேன். அப்போது தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஊடகம் மூலம் உங்களுடன் பேச முடிவெடுத்தேன். இந்த மாநாட்டில், மத்திய அரசு, மாநில அரசு, ஆயுதப் படைகள்,  கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் என பல்வேறு துறையின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்கள். மேலும், 12 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்படுகிறது’ என்றும் கோரினார்கள். நான் எல்லா விருது வென்றவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். அவர்களது முயற்சிகளைப் பாராட்டுகிறேன். வெற்றியாளர்களுக்கும்  எனது  வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதோடு  அவர்களின் முயற்சிகளை பாராட்டுகிறேன். குறிப்பாக இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் இணைய ஆட்சிமுறை, திறன் மேம்பாடு,வேலைவாய்ப்பு திறனை மையாமாக கொண்டுள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தியாவை ஒரு கணினி அறிவு பெற்ற சமூகமாகவும் அறிவு சார் பொருளாதாரம் உள்ள நாடுகவும் மாற்ற வேண்டும் என்ற ‘டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் கனவை நினைவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்கும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வலுவான கணினி உள்கட்டமைப்பை உருவாக்க நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.. “டிஜிட்டல் மைய இந்தியா” எனும் கனவு திட்டத்தின் முக்கிய அங்கம் இணைய ஆட்சிமுறை. நம் நாட்டின் ஆட்சிமுறையில் நாம் எவ்வளவு தொழில்நுட்பத்தை கொண்டுவருகிறோமோ அவ்வளவு நல்லது. தொழில்நுட்பம் மற்றும் இணைய ஆட்சிமுறைகள் செயல்முறைகளை எளிமையாக்கும்.நடைமுறை மற்றும் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் பல தடைகளையும் இது தகர்த்தெறியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். . இணைய ஆட்சிமுறையை நாம் பார்க்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது செல்பேசிதான். அதனால் செல்பேசி ஆட்சிமுறைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முடிந்தவரை செல்பேசி மூலம் பல சேவைகளை வழங்கும் வழிகளை கண்டறியும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நமது செல்பேசியில் உலகத்தை கொண்டுவருவோம். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள்தான் நமது முக்கிய சொத்து. அவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் திறன் மேம்பாட்டை அளிப்பது அவசியம். இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு தற்போதுள்ள தொழில்நுட்பமும்  அதன் சிறப்பான பயன்பாடும் அதிகமாக தேவைப்படுகிறது. அதற்குத் தேவையான பணிகளை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவோம். இந்த அனைத்து இந்திய மாநாடு, அடுத்து வரும் ஆண்டுகளில் நமது நாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு புதிய முயற்சிகளை ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று நான் நம்புகிறேன். மாநாட்டில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன். நன்றி!. சமீபத்தில்,  அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்தபோது “சவுண்ட் கிளவுட்” மூலம் “மனதின் குரல்” நிகழ்ச்சியை பிரதமர் பகிர்ந்துகொண்டார். ஜனவரி 28 ஆம் தேதி தேசிய மாணவர் படை அனுவகுப்பில் பிரதமர் ஆற்றிய உரையை அவர் முகநூல் மற்றும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். (தகவல்: பி.ஐ.பி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories