சீட்டிங்கில் ஈடுபடும் சிறுபான்மையினர் நிறுவனங்கள்: இறுக்கிப் பிடிக்கும் யோகி ஆதித்யநாத்! கொதிப்பின் பின்னணி!

yogi adityanath - 2026

உத்தரபிரதேச மாநில அரசு, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் திட்டங்களை ஆய்வு செய்ய 75 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் பகீரிடும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த சிறுபான்மை நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்காமல், எஸ்.சி., மாணவர்களை அந்த இடத்தில் நிரப்பியுள்ளன என்று தெரிய வந்தது. அதன் மூலம், எஸ்.சி., மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையைப் பெற்று ஏமாற்றியிருக்கின்றன. இந்த நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப் குறித்து இப்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சமூக நலத்துறை, உ.பி.,யில் சிறுபான்மையினர் அமைப்புகள் இவ்வாறு மாணவர் சேர்க்கையில் ஒழ்ங்கீனத்தை கடைப்பிடித்து, முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற பல சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதித்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றம் செய்யப்பட்டது நிரூபணம் ஆனால், இந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

பரேலி மற்றும் பதானின் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஜக்மோகன் சிங், இது குறித்துக் குறிப்பிடுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல், கவுன்சிலிங் மேற்கொள்ளப்படாமல் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி உள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை நிதி, அவ்வப்போதைய நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து அமையும். ஆனால் எஸ்.சி. பிரிவில் உள்ள மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கட்டாய நிதி உதவி அதுவும் 100% கிடைக்கும். அதை அவர்கள் பணத்தைக் கட்டி, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில சிறுபான்மை நிறுவனங்கள் எஸ்.சி., மாணவர்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் ஸ்காலர்ஷிப் தொகையை இறுதியில் பெற முடியும் என்று கூறி, எஸ்.சி. மாணவர்கள் இடத்தில் 100% அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.

மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் தாமதம் ஏற்படும் போது இந்த வாய்ப்பை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளியில் இந்த நிதி விடுவிக்கப் படும் என்பதால், முதலில், எஸ்சி மாணவர்களிடமிருந்து தங்கள் சொந்தப் பணத்தை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, பின்னர், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் நிதி அந்த மாணவர்களுக்குக் கொடுக்கப் படும் போது, அவற்றை இந்த நிறுவனங்கள் திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால், மத்திய அரசு, இந்த முறைகேட்டை உணர்ந்து கொண்டு, மாணவர்களுக்கு கடந்த 2016-17 ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஸ்காலர்ஷிப் தொகையை போட்டு விடுகிறது. இதனால், சிறுபான்மை நிறுவனங்களுக்குக் கிடைக்கும் முறைகேட்டு நிதி தடுக்கப்பட்டுவிட்டது. இது குறித்து கண்டறியப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லக்னோவில் எஸ்.சி., மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் மோசடி செய்த 10 சிறுபான்மை நிறுவனங்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

இந்த விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் உ.பி. அரசு மிகக் கடுமையான நெறிமுறைகளைக் காட்டுவதாலும், மத்திய அரசின் நிதியை முறைகேடாகப் பெற இயலாததாலும், சிறுபான்மை நிறுவனங்கள் கடும் கோபத்தில் உள்ளன.

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories