நிதிஷ், லாலு கட்சிகள் இணைய முடிவு: பேச்சுவார்த்தை தொடக்கம்

பாட்னா:

பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. விரோதிகளாக இருந்த இரு தரப்பும் பொது எதிரியான பா.ஜ.க.,வை வீழ்த்த பீகார் சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்து கை கோத்துள்ளன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 100 தொகுதிகளில் போட்டி போடுகின்றன.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வருகிற 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் இரு கட்சிகளின் கூட்டணி அரசே அமையும் என்றும் கூட்டணி அமைச்சரவையே அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி தோல்வியைத் தழுவினால் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் மீண்டும் முதல்வராவார். அவர் ஆட்சிக்கு லாலுபிரசாத் கட்சியால் பின்னாளில் பிரச்னைகள் வந்து விடக்கூடாது என்று கருதும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் ராஷ்ட்டீரிய ஜனதா தளத்தை தங்கள் கட்சி உடன் இணைத்துக் கொள்ளும் யோசனையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்ததால் அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இரு கட்சிகளும் இணைவதில் பெரிய அளவில் தடை எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் இதுதொடர்பாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சிகளை இணைப்பது குறித்து சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும், ராஷ்டீரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும் சந்தித்து பேசினார்கள். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர்கள் சிலரும் இந்த இணைப்பை விரும்புவதால் லாலுபிரசாத் யாதவும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

67 வயதாகும் லாலுபிரசாத் யாதவ் குற்றவழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் மீண்டும் முதல்வராக இயலாத நிலை உள்ளது. எனவே அவர் தில்லி அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இணையும் பட்சத்தில் தில்லியில் தனக்கு வலுவான நிலை கிடைக்கும் என்று லாலு நம்புகிறார். மேலும் பீகாரில் தன் மகன்கள் அரசியலுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க முடியும் என்று நினைக்கிறார். எனவே, ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இன்னும் சில மாதங்களில் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories