
புதுதில்லி,
நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்தப் பட்டியலில் எழுத்தாளர் அருந்ததி ராயும் சேர்ந்துள்ளார். அவர், தனக்கு வழங்கபட்ட விருதை திருப்பி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,
நான் என்னுடைய தேசிய விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்காக நான் அவமானப்படுகிறேன். அதே நேரம் என்னுடைய விருதை திருப்பியளிப்பதற்காக பெருமைப்படுகிறேன் – என்றார்.


