இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத் துறையில் உள்ள காவலர்கள் பிரிவில் பெண்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.