புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு முன்னதாக, பொதுக்கூட்டம் நடந்தபோது, கஜேந்திரா என்ற விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
Gajendra’s death has saddened the Nation. We are all deeply shattered & disappointed. Condolences to his family. — Narendra Modi (@narendramodi) April 22, 2015
கஜேந்திராவின் மரணத்தினால் நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் நாங்கள் உடைந்து போய்விட்டோம். ஏமாற்றமாக உள்ளது. அவரின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
At no point must the hardworking farmer think he is alone. We are all together in creating a better tomorrow for the farmers of India. — Narendra Modi (@narendramodi) April 22, 2015
கடுமையாக உழைக்கும் விவசாயிகள், எந்த நேரத்திலும் தனித்துவிடப்பட்டோம் என உணர வேண்டாம். இந்தியாவில், நாளை விவசாயிகளுக்கு சிறந்த நாளாக உருவாக்க நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம் – எனத் தெரிவித்துள்ளார்.


