மோடியின் ஹெலிகாப்டர் சோதனை: தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்!

Published:

modi in odisha - 2026

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்வதற்காகச் சென்றிருந்தார். அப்போது ஒடிசா மாநில தேர்தல் பார்வையாளர் முகமது மொசின் என்பவர், மோடி சென்றிருந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொன்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனை விதிகளுக்கு முரணாக நடைபெற்றுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்வதாக, ஆணையத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் கருப்புப் பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக ஆணையம் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டுள்ளார் என்று, தேர்தல் பார்வையாளர் முகமது மொசின் மீது தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. தொடர்ந்து, முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆயினும், கடமையைச் செய்த அதிகாரியை இடைநீக்கம் செய்து பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img