அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும்: கோருபவர் காங்கிரஸ் மக்களவைத் தலைவர்

abinandan adhir ranjan - 2026

விங் கமாண்டர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி. அவர் இன்று மக்களவையில் பேசும்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

பாரதத்தைச் சேர்ந்த விங் கமெண்டர் அபிநந்தன், கடந்த மே 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தைத் துரத்தி அடித்தார். அப்போது அவர் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளாக, பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரைப் பிடித்துச் சென்றது. அந்நிலையில், பாகிஸ்தான் ராணூவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் தைரியமாகவும் பதிலளித்தார். அவர் பதிலளித்த வீடியோவை பாகிஸ்தான் அதிகாரிகளே வெளியில் உலவ விட்டனர்.

ஆனால் அதன் மூலம் விமானி அபிநந்தன் இந்தியர்களிடம் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் எல்லாம் ஆச்சரியப் படுத்தும் மனிதர் ஆகிவிட்டார். இந்தச் சம்பவம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து, இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து மற்ற உலக நாடுகள் தங்கள் அழுத்தத்தை வெளிப்படுத்த, அபிநந்தனை அடுத்த நாளே விடுவித்தது பாகிஸ்தான்.

அப்போது, அபிநந்தனின் வீர மிகுந்த சொற்கள் மக்களை மயக்கியது போல், அவர் வைத்திருந்த கம்பீரமான மீசையும் பலருக்கும் பிடித்துப் போனது. சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் அதனை ஒரு அடையாளச் சின்னமாகவே மனத்தில் பதித்துக் கொண்டனர். அந்த மீசையின் வடிவத்தைக் கண்ட இளைஞர்கள் அதே ஸ்டைலில் கம்பீரமான வகையில் மீசை வைத்தனர்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இதனிடையே இன்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி மக்களவையில் பேசியபோது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு விருது வழங்கப்பட வேண்டும், அவரது மீசையை ‘தேசிய மீசையாக’ அறிவிக்க வேண்டும்” என்று வேண்டுகோளை முன்வைத்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக., அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தும், கோட்டை விட்டது. அதற்குக் காரணமாக, காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுலின் பாகிஸ்தான் ஆதரவுப் பேச்சும், ராணுவத்துக்கு எதிரான பேச்சும் என்று கூறப் பட்டது.

மேலும், அபிநந்தன் குறித்து தேர்தலில் பாஜக., எதையும் பேசக் கூடாது என்றும், அது பாஜக.,வுக்கு ஆதரவானதாக மாறக் கூடும் என்று தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியது. காங்கிரஸின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையமும், பாஜக.,வோ மோடியோ அபிந்தந்தன் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தேர்தல் பிரசாரங்களில் பேசக் கூடாது என்றது.

இந்நிலையில் காங்கிரஸின் போக்கில் ஒரு மாற்றமாக, அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்நிறுத்தப் பட்டிருக்கிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories