புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகும் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனு மீது விசாரணை முடிந்து புதன்கிழை நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்பழகனின் மனு மீதான 136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை மூத்த நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஆர். பானுமதி ஆகியோர் தனித் தனியாக எழுதியிருந்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுரின் தீர்ப்பில், “ஆட்சி அதிகாரத்தின் தலையீடு போன்ற காரணங்களால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரம் அம்மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, பவானி சிங்கின் நியமனம் தவறானது என்ற அன்பழகனின் முதலாவது கோரிக்கையை ஏற்கிறேன். அதேநேரம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகனின் தரப்பு பதிலை எழுத்து பூர்வமாகத் தாக்கல் செய்ய அவர் விடுத்த மற்றொரு கோரிக்கையை நிராகரிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி ஆர்.பானுமதி எழுதிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது பணி முடிந்ததைக் கர்நாடக அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் சிறப்பு வழக்குரைஞராக ஆஜரானதில் தவறேதும் இல்லை. எனவே, அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் அன்பழகன் மனு தொடர்பாக பின்னர் இரு நீதிபதிகளும் இணைந்து பிறப்பித்த உத்தரவில், “இந்த மனுவை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரை செய்கிறோம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு முன்வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா, “இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வு விசாரித்து முடிக்கும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள தீர்ப்பை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதி மதன் பி.லோகுர், “அது அந்த நீதிபதியின் முடிவைப் பொருத்தது’ என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

