ஜனதா பரிவார் – ஆறு கட்சிகளின் சங்கமம் : தலைவராக முலாயம் !

janata-parivarபுதுதில்லி: முன்னர் ஜனதா கட்சியுடன் இருந்த தலைவர்கள் பின்னர் தங்களுக்கென கட்சிகளை உருவாக்கி பிரிந்து சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை எழுந்துள்ளதால், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய ஜனதா கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கான கூட்டம் தில்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், பொதுச் செயலர் கே.சி.தியாகி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவெ கவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்களின் ஜனதா பரிவார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ்… இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முந்தைய ஜனதா கட்சிகள் மீண்டும் இணைந்திருக்கின்றன. இது மிகவும் உறுதியான கூட்டணி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை குறித்து முடிவெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தேவகவுட, இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாத், ஓம்பிரகாஷ் சௌதாலா, சரத் யாதவ், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தே.ஜ.கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே புதிய கட்சியின் குறிக்கோள். எந்தவொரு விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அராஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் முலாயம் சிங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories