ஜனதா பரிவார் – ஆறு கட்சிகளின் சங்கமம் : தலைவராக முலாயம் !

janata-parivarபுதுதில்லி: முன்னர் ஜனதா கட்சியுடன் இருந்த தலைவர்கள் பின்னர் தங்களுக்கென கட்சிகளை உருவாக்கி பிரிந்து சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை எழுந்துள்ளதால், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய ஜனதா கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கான கூட்டம் தில்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், பொதுச் செயலர் கே.சி.தியாகி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவெ கவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்களின் ஜனதா பரிவார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ்… இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முந்தைய ஜனதா கட்சிகள் மீண்டும் இணைந்திருக்கின்றன. இது மிகவும் உறுதியான கூட்டணி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை குறித்து முடிவெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தேவகவுட, இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாத், ஓம்பிரகாஷ் சௌதாலா, சரத் யாதவ், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தே.ஜ.கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே புதிய கட்சியின் குறிக்கோள். எந்தவொரு விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அராஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் முலாயம் சிங்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Entertainment News

Popular Categories