இஸ்ரேலில் தேர்தல் பிரசாரத்துக்கு ‘உதவும்’ மோடி! கலக்கும் பிரமாண்ட பேனர்கள்!

Published:

modi netanyahu - 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பாரதப் பிரதமர் மோடி கைகுலுக்கிய படி இருக்கும் மிகப்பெரிய ‘பேனர்’ இஸ்ரேலில் தேர்தல் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் செப்.17 ஆம் தேதி மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. மீண்டும் தாம் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் பிரசாரத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்திருக்கிறார். அரபு நாடுகளிலும் பாரதப் பிரதமருக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தனது தேர்தல் விளம்பரத்தில் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கைகுலுக்கி நட்பு பாராட்டும் பெரிய அளவு பேனர்கள் நகரில் வைக்கப் பட்டுள்ளன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

உலக தலைவர்களுடன் இஸ்ரேல் பிரதமர் நட்புடன் திகழும் வகையில், அவர்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் இஸ்ரேலில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படங்களை இஸ்ரேலி பப்ளிக் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனைச் சேர்ந்த தொடர்பாளர் அமிச்சாய் ஸ்டீன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவுக்கு இந்தியாவில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியர்கள் பலர் இஸ்ரேலுடன் திகழும் நட்புறவை வரவேற்று பெருவாரியாக கருத்துகளைப் பதிந்துள்ளனர். இந்த டிவிட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img