மேகதாதுவை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் பந்த்

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பதிலுக்கு தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகத்தில் சனிக்கிழமை இன்று முழு அடைப்புப் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அரசு ஆதரவு இல்லை என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories