ராம சேது குறித்து பெருமை கொள்வோம்: ஹெச்.ராஜா

hraja - 2026

ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராமசேதுவை நினைத்து பெருமை கொள்வோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

கீழடி ஆய்வு குறித்த தகவல் வெளிவரும் முன்பே, அது குறித்த தங்களது விஷமத்தனமான கருத்துகளைத் தெரிவித்தனர் பலர். இந்நிலையில், நாட்டின் மிகப் பழைமையான இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்டு, தமிழ் மண்ணில் இருக்கும் வரலாற்றுப் பூர்வ இடங்கள், சின்னங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள கருத்து…

பெருமை கொள்வோம் – ராம சேது: பழம்பெரும் இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா – இலங்கை இடையேயான கடற்பாலம் உண்மையானதா? அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆம் என்கின்றன.

செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்திலிருந்து இந்தியா-இலங்கை இடையே இந்தியப் பெருங்கடலில் தொடர் சங்கிலி போல் தோற்றமளிக்கும் சில படிமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது என்று அறிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஒரு ஆராய்ச்சியாளர், “இதைத்தான் மந்திர பாலம் என இந்து புராணப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் ராமரைக் குறிப்பிட்டுள்ளனர்”எனக் கூறுகிறார் செல்ஸீ ரோஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.

“அந்த மணல் திட்டின் மேல்பரப்பில் இருக்கும் பாறைகள் மணல் திட்டை விட முந்தைய காலத்தில் உருவாகியிருக்கிறது. மணல்திட்டு வெறும் 4000 ஆண்டுகளுக்கு முந்தையதே அந்தப் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது” எனப் பேசுகிறார்.

ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராம சேதுவை நினைத்து பெருமை கொள்வோம்… – என்று குறிப்பிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories