தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த தினகரன் முயல்வதாக குற்றச்சாட்டு

Published:

சென்னை:

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த முயற்சி செய்துவருகிறார் என்று ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தினகரன் மீது ஓ.பி.எஸ் அணியும், ஓ.பி.எஸ் அணி மீது தினகரன் தரப்பும் மாறி மாறி புகார்களை கூறிவருகிறார்கள். சமீபத்தில் இரட்டை மின் கம்பம் சின்னத்தை, ஓ.பி.எஸ் அணியினர் இரட்டை இலை சின்னத்தை போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என தினகரன் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது.

அதனையடுத்து இதுபற்றி விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்த வில்லை எனவும், தினகரன் தரப்புதான் பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் அளித்திருந்தர். மேலும், அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அங்கு தேர்தலை நிறுத்த தினகரன் அணியினர் முயற்சி செய்வதாக ஓ.பி.எஸ் அணி சாரிபில் மைத்ரேயன் எம்.பி. தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இரு அணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img