அரசியலப் பத்தி எதுவும் கேக்காதீங்க: ரஜினி டென்ஷன்!

Published:

rajinikanth3 - 2026

சென்னை:

சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது பேசவும் செய்தார்.

அவருடைய பேச்சு, அரசியல் குறித்து இருந்ததால் கடந்த ஓரிரு நாட்களாக அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவளிப்போம் என்று சில பெரும்புள்ளிகள் ஆலோசனையை வழங்கினர். இது குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் ஊகங்கள் பல பரவின. நேற்று தனது பேச்சின் போது, பாஜக.,வில் இணைவீர்களா என்று கேட்ட கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று மழுப்பலாகக் கூறிச் சென்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,

ரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்; அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று தெளிவாகக் கூறினார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img