மும்பையில் தொடங்கியது ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு: புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!

Published:

IMG 20170528 WA0047 - 2026
IMG 20170528 WA0050 - 2026
IMG 20170528 WA0048 - 2026
IMG 20170528 WA0049 - 2026

 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில்
இன்று தொடங்கியது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும்
இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள இப்படத்தை
ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கிறார்.

காலா’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக்
போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் மே 28ம் தேதி
மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையிலிருந்து
மும்பைக்கு சென்றார் ரஜினி.

இந்நிலையில், மும்பை தாராவி பகுதியில் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. காலா
படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ரஜினி தாடி மற்றும் கருப்பு கண்ணாடி, வேஷ்டி சகிதமாக ஸ்டைலாக நிற்கும் அந்த
புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அந்த புகைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர்.

இணையத்தில் வெளியான இந்த புகைப்பட விவகாரம் காலா படக்குழுவினர் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img