
சென்னை:
தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார்.
நளினி வேலூர் பெண்கள் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால் திருமணத்துக்கு உதவ வசதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நளினி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
prisoner-nalini-hunger-strike-for-change-her-to-puzhal-prison



