உலக நன்மைக்காகவும், கொரானா நோயிலிருந்து மீண்டு வரவும், காஞ்சி காமகோடி பிடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி 127 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் அனுஷம் சிறப்பு அபிஷேக ஆராதனை – பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் வீட்டிலிருந்தபடியே மொபைல் போன் வாயிலாக தரிசனம்
நாடு முழுவதும் கொரானா ஊரடங்கு தடை உத்தரவால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடபட்டுள்ள நிலையில் ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மூலம் தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் கூடல்நகரில் உள்ள அஞ்சல்நகரில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பாக உலக நன்மைக்காகவும், கொரானா நோயிலிருந்து மீண்டு நலமுடன் வாழவும், காஞ்சி காமகோடி பிடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி 127 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் அனுஷத்தின் அனுகிரஹத்தின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் கனேஷ சாஸ்திரி, சீனிவாசன், சீனிவாச காஸ்திரி காஸ்திரி குமார் சாஸ்திரிகள் மூலம் ஸ்ரீ மஹா பெரியவா விக்ரஹத்திற்கு சிறப்பு ஹோமம், இளநீர், பால், சந்தனம், பழவகைகள், திருநீறு உள்ளிட்ட அபிஷேகங்கள், சிறப்பு தீபஆராதனைகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மொபைல் போன் மூலம் சமூக வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.. அதன் மூலம் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
- ரவிச்சந்திரன், மதுரை