திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா!

ethiraja gurupoojaa
ethiraja gurupoojaa

திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா நடைபெற்றது

சைவ குல எதிராஜர் என்று போற்றப்படும் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகள் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24ஆவது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணைவண்ணம் இன்று 17 .06 . 2020 புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவாவடுதுறை ஸ்ரீ மறைஞான தேசிகர் தபோவனத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதின 12-ஆவது குருமகாசன்னிதானம் குருமூர்த்த திருக்கோயிலில் ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகள் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

சித்தாந்த சைவ அருட் பாலினத்தை சீரும் சிறப்புமாக நடத்திய திருவாவடுதுறை ஆதீன பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களின் அருளாணைவண்ணம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகளால் குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவில் திருமுறை பாராயணம் ,ஆதீன குரு மூர்த்திகள் தோத்திரப் பாடல்கள் இசைக்கப்பட்டது. ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகள் அருள் மாட்சியில் பல சிறப்புகள் நடைபெற்றது.

குருமகாசன்னிதானம் அவர்கள் ராமநாதபுரத்தில் எழுந்தருளியிருந்த பொழுது , அங்கு இருந்த அரசர் அவர்கள் ராமநாதபுரத்தில் மழை பொழிவு இல்லை , பயிர்கள் எல்லாம் வாடி இருக்கிறது, மழை பெய்யச் செய்து வளம் கொழிக்க குருமா சன்னிதானத்தில் வேண்டிக்கொண்டார்.

ethiraja gurupuja
ethiraja gurupuja

குருமகாசன்னிதானம் அவர்களும் ஆதீன புலவர்களையும் ஓதுவார்களையும் அழைத்து மேகராகக்குறிஞ்சி பண்ணிசையில் தேவார மழை பதிகங்களை இசைக்க செய்தார்கள். அதிசயம் என்னவென்றால் மழை பொழிவு ராமநாதபுரத்தில் சிறப்பாக இருந்தது.

குருமகாசந்நிதானம் அவர்களுடைய இறை அருளையும் இறைமாட்சியையும் நன்கு உணர்ந்த ராமநாதபுரம் மன்னன் ஆதீன சீடராக விளங்கி, ஆதீனத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். குருமகாசந்நிதானம் அவர்கள் சிவாகமங்களில் இரண்டு லட்சம் ஸ்லோகங்களை பொருளுணர்ந்து படித்து அருளினார்கள்.

சிவ ஆகம புலமை பெற்றவர். அதுமட்டுமல்ல பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு பண்டார சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு படித்தவர். மாபாடியம் கண்ட மாதவ சிவஞான யோகிகள் 12 மாணவர்களில் 12-ஆவது குருமகாசன்னிதானமும் ஒருவர்.

இவரது அருள் ஆட்சியிலே கச்சியப்ப முனிவர், தொட்டிகலை சுப்பிரமணிய முனிவர், சாத்திரம் சாமிநாத முனிவர் போன்ற முனிவர்கள் எல்லாம் ஆதீன தமிழ் மண்டபத்தை அலங்கரித்தார்கள்.

குருமகாசந்நிதானத்தின் ஆட்சி காலத்தில் சாத்திரம் சாமிநாதன் முனிவரால் திருவாவடுதுறை புராணம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதுமட்டுமல்ல 12ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள், இளைய குருமகா சன்னிதானமாக இருந்தபொழுது, மாதவ சிவஞான யோகிகள், மாதவ சிவஞான போதம் அரங்கேற்றப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பூலோக கைலாயமாக விளங்கியது. கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விநாயக புராணம் இவரது அருளாட்சியில் அரங்கேற்றப்பட்டது.

ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் திருக்கோயில் குருமகாசன்னிதானத்தின் அருள் ஆட்சிகாலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி குருமா சன்னிதானத்தின் அருளாட்சியில் இயற்றப்பட்டது.

இவ்வளவு சிறப்புகளை பெற்ற பன்னிரண்டாவது குருமகாசன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிக மூர்த்திகளின் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீ மறைஞான தேசிகர் தபோவனத்தில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார்.

  • டாக்டர் ராம.சேயோன், மயிலாடுதுறை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories