December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

தன் மீதான குற்றச்சாட்டுக்கு மஞ்சு வாரியாரின் சதியே காரணம் என்கிறார் திலீப்!

Kavya Bhavan Dileep - 2025

திருவனந்தபுரம்:

தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தன் முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரின் சதி இருப்பதாக நடிகர் திலீப் கூறியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் சீண்டல் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடியான நிலையில், திலீப் கேரள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனால் திலீப் மீண்டும் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, தனது தரப்பு நியாயங்கள் சரியாக முன் வைக்கப் படாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வழக்கறிஞரை மாற்ற முடிவு செய்தார்.

பின்னர், திலீப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ராமன்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர், திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சிலவற்றை திலீப் தெரிவித்துள்ளார். அதில், ‘நடிகை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியின் என் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியாரின் சதி உள்ளது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்ல் பங்கேற்ற மஞ்சு வாரியார், என்னை இந்தக் குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் சில் கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து நான் போலீசாரிடம் கூறியுள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்த போது, மஞ்சு வாரியார் குறித்தும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார்மேனன் குறித்தும் முக்கிய தகவல்களை அளித்தேன். மஞ்சு வாரியாருக்கும் ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு குறித்துக் கூறிய போது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார். இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்துள்ளது. அதில், நான் சிக்கிக் கொண்டேன்’ என்று தனது புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளாராம்.

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories