தன் மீதான குற்றச்சாட்டுக்கு மஞ்சு வாரியாரின் சதியே காரணம் என்கிறார் திலீப்!

Kavya Bhavan Dileep - 2026

திருவனந்தபுரம்:

தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தன் முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரின் சதி இருப்பதாக நடிகர் திலீப் கூறியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் சீண்டல் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடியான நிலையில், திலீப் கேரள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனால் திலீப் மீண்டும் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, தனது தரப்பு நியாயங்கள் சரியாக முன் வைக்கப் படாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வழக்கறிஞரை மாற்ற முடிவு செய்தார்.

பின்னர், திலீப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ராமன்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர், திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சிலவற்றை திலீப் தெரிவித்துள்ளார். அதில், ‘நடிகை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியின் என் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியாரின் சதி உள்ளது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்ல் பங்கேற்ற மஞ்சு வாரியார், என்னை இந்தக் குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் சில் கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து நான் போலீசாரிடம் கூறியுள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்த போது, மஞ்சு வாரியார் குறித்தும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார்மேனன் குறித்தும் முக்கிய தகவல்களை அளித்தேன். மஞ்சு வாரியாருக்கும் ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு குறித்துக் கூறிய போது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார். இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்துள்ளது. அதில், நான் சிக்கிக் கொண்டேன்’ என்று தனது புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளாராம்.

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories