12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன் மாரடைப்பால் மரணித்த சோகம்!

deadbody - 2026

12ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் மாணவர் வெங்கட சதீஷ் (17). இவர் கூடூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்காக மாணவர் சதீஷ் பள்ளி சென்றுள்ளார்.

அங்கு வழக்கம்போல், தேர்வுகளை முடித்து விட்டு தேர்வு மையத்தின் வெளியே வந்த போது அவருக்கு மார்பு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவன் சதீஷ் சக மாணவர்களிடம் தனக்கு வலி ஏற்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளான், தொடர்ந்து, அந்த மாணவர்கள் பள்ளியில் காவல் பணியில் இருந்த போலீசாரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர் சதீஷை உடனடியாக அழைத்து சென்று காற்றோட்டமான இடத்தில் போலீஸ் அதிகாரிகள் அமர வைத்துள்ளனர்.

எனினும், அவருக்கு மூச்சுத் திணறல் அடங்கவில்லை. இதையடுத்து, ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர தாமதமாகவே, போலீசாரே மாணவன் சதீஷை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாணவனின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனை வந்துள்ளனர்.

எனினும், பெற்றோர் மருத்துவனை வருவதற்கு முன்பே மாணவன் சதீஷ் உயிரிழந்துவிட்டதால், அவர்களால் கடைசி நேரத்தில் கூட தனது மகனுக்கு உடனிருந்து ஆறுதல் தெரிவிக்க முடியாமல் போனது. இதனால், மருத்துவமனை வளாகத்திலே மாணவனின் பெற்றோர் கதறி துடித்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories