January 14, 2025, 1:10 AM
25.6 C
Chennai

அடடா நடிகையாகும் அவந்திகா சுந்தர் சி! ஆசிர்வாதம் கேட்கும் குஷ்பூ!

தனது மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாத்துறைக்கு வரவிருக்கும் நிலையில் ரசிகர்களாகிய உங்களின் ஆசிர்வாதம் தேவை என நடிகை குஷ்பு சுந்தர் டிவிட் செய்துள்ளார்

தமிழ் சினிமாவில் 1990களில் கொடிக்கட்டிப்பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி, கமல்,பிரபு, விஜயகாந்த் போன்ற முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் இதுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவருகிறது.

முக்கியமாக குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பின்னர் முறைமாமன் படத்தில் நடித்த போது, இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

இந்நிலையில் தான் தனது மூத்த மகளாக அவந்திகா விரைவில் நடிக்கவுள்ளதாக குஷ்பு டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

தனது டிவிட்டர் பதிவில், என் மூத்த மகள், லண்டனில் புகழ்பெற்ற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் தனது படிப்பை வெற்றிக்கரமாக முடித்துள்ளார். தற்போது சொந்தமாக முயற்சிக்க வேண்டும் என அவர் எண்ணுவதால், அவருடைய போராட்டம் இனி மேல் ஆரம்பிக்கிறது.

ALSO READ:  முதல் முறையாக கரும்பு பயிரிட்டு அசத்திய விவசாயி; பொங்கலுக்கு விளைச்சல் அமோகம்!

ஆனால் அவரை நாங்கள் அறிமுகப்படுத்தமாட்டோம், யாரிடமும் பரிந்துரை செய்யமாட்டோம் என்றும் அவருக்கு உங்களுடைய வாழ்த்துக்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன்

பொங்கல் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன் -***