மதுரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்..

மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 11 கிலோ திமிங்கல எச்சம் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்பது விலை உயர்ந்த பொருள் ஆகும். ஆனால், இதனை பதுக்குவது சட்டவிரோதம். இந்த திமிங்கல எச்சமானது உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்புக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் திமிங்கல எச்சத்துக்கு அதிக கிராக்கி நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடலில் அரிதாக கிடைக்கும் இதனை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கில் பணத்தை கைமாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் ஒரு நகைக்கடை பட்டறையில், திமிங்கலத்தின் எச்சம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனஉயிரின பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே அதிகாரி மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த பட்டறைக்குள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 11 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

பட்டறையில் இருந்த மதுரை மஞ்சணகார தெருவை சேர்ந்த ராஜாராம் (வயது 36), வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூரை சேர்ந்த கவி (48) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் கவிதான் அதனை கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.

திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே சுரக்கும் அம்பர்கிரிஸ் எனும் திரவம் உருண்டையாக வடிவெடுத்து, அதன் எச்சமாக மிதந்து அலைகளால் கரைக்கு அடித்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நெருப்பினால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். இதற்காக கடலில் திமிங்கலத்தை சிலர் வேட்டையாடுவதால், அம்பர்கிரிஸ் தடை செய்யப்பட்ட அரிய வகை பொருளாக கருதப்படுகிறது. இந்த திமிங்கல எச்சம் கவிக்கு எப்படி கிடைத்தது, அதனை நகைப்பட்டறையில் பதுக்கியது ஏன்?் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

742238 1656075834223 01 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories